News April 26, 2025

மஞ்சள் படையின் பிளே ஆஃப் கனவு கலைந்தது?

image

7 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசியாக இருக்கும் CSK-க்கு, பிளே ஆஃப் வாய்ப்பு மங்கியுள்ளது. இந்த சீசனில் தொடக்கம் முதலே அந்த அணி சொதப்பி வருகிறது. எஞ்சி இருக்கும் 5 போட்டிகளில் வென்றாலும் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம்தான். இதற்கு முன்பு 2020, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் லீக் சுற்றுடன் CSK நடையை கட்டி இருக்கிறது. இந்தாண்டும் அதேநிலை தொடர்கிறது. CSK-ன் சொதப்பலுக்கு காரணம் என்ன?

Similar News

News April 27, 2025

உலக ஜாம்பவான்களுடன் போட்டி போடும் ரிலையன்ஸ்

image

நிகர மதிப்பின் அடிப்படையில், உலகின் மிகவும் மதிப்புமிக்க 25 நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமம் இணைந்துள்ளது. ப்ளூம்பெர்க் தரவுகளின் படி, $118 பில்லியன் நிகர மதிப்புடன் ரிலையன்ஸ் 21ஆம் இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் மைக்ரோசாஃப்ட், அலிபாபா, ஆல்பாபெட் உள்ளிட்ட உலகளாவிய ஜாம்பவான் நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. மேலும், இதன் சந்தை மூலம் $140 பில்லியனாக உயர்ந்துள்ளது.

News April 27, 2025

₹1,000 கோடியை கொட்டினாலும் அது ஈசி இல்லை: நானி

image

₹1,000 கோடி போட்டு படம் பண்ணினாலும், ‘மெய்யழகன்’ படத்தில் இருந்த அந்த உணர்வை திரையில் கடத்துவது அவ்வளவு எளிதல்ல என நடிகர் நானி தெரிவித்துள்ளார். இந்த படத்தை பார்த்ததும் ஆடிப்போய் விட்டதாகவும், நடிகர் கார்த்தியிடம் நிறைய பேசியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இயக்குநர் பிரேம் குமாரின் இந்த படைப்பு காலத்திற்கும் நிலைத்து நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 27, 2025

காஷ்மீர் இளைஞனின் உயிர் தியாகம்.. ஷிண்டே நிவாரணம்

image

பஹல்காம் தாக்குதலின் போது, சுற்றுலாவாசிகளை காப்பாற்ற முயன்று உயிரிழந்த குதிரை ஓட்டி ஹுசேன் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். ஹுசேனின் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசிய அவர், உங்களுடைய மகனின் தியாகம் வீண் போகாது என ஆறுதல் கூறினார். தீவிரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்ற போது ஹுசேன் கொல்லப்பட்டார்.

error: Content is protected !!