News September 4, 2024
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹர்விந்தர் சிங்

பாரலிம்பிக்ஸ் ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் ஈரான் வீரரை 7-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, கலப்பு இரட்டையர் பிரிவில் ஷீதல் தேவி மற்றும் ராகேஷ் குமார் ஜோடி வெண்கலம் வென்றனர். இந்தியா இதுவரை 21 பதக்கங்களை வென்றுள்ளது.
Similar News
News July 10, 2025
பட்டாவில் அதிரடி மாற்றம்… விரைவில் புதிய நடைமுறை

இ- பட்டாவில் போட்டோவை இணைக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த திட்டத்தை கொண்டுவர இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். eservices.tn.gov.in இணையதளத்தில் மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு இ- பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம். SHARE IT.
News July 10, 2025
இந்தியாவுக்கு எதிராக 3,000 ரன்கள்.. ஜோ ரூட் புது சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 3,000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார். 93 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடியுள்ளனர். ஆனால் இதுவரை டெஸ்டில் 3,000 ரன்கள் விளாசியது இல்லை. ஆனால் ஜோ ரூட், லார்ட்ஸ் டெஸ்டில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதில் 10 சதங்கள், 13 அரைசதங்கள் அடங்கும்.
News July 10, 2025
தமிழகத்தில் 8 இடங்களில் சதமடித்த வெயில்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. அதேவேளையில், ஒருசில இடங்களில் வெப்பமும் வாட்டி வதைத்தது. மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பக்காற்று வீசியது. அந்தவகையில் ஈரோடு, வேலூர், நாகை, கடலூர், திருச்சி, சென்னை மீனம்பாக்கம், மதுரை நகரம், மதுரை விமான நிலையம் உள்ளிட்ட 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.