News July 4, 2025
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

ஈட்டிய விடுப்பில் 15 நாள்கள் வரை அக்.1 முதல் சரண் செய்து பணப் பயன் பெற்றுக்கொள்ளலாம் என TN அரசு அறிவித்துள்ளது. 2026-ம் ஆண்டு ஏப்.1 முதல் அமலாகும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே (அக்.1 முதல்) ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர். இதற்காக ஆண்டுக்கு ₹3,561 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.
Similar News
News September 7, 2025
கழுத்து வலியை விரட்டும் யோகா!

முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள் பிறையாசனத்தை செய்தால், நிவாரணம் கிடைக்கும். இந்த ஆசனம் செய்யும்போது உடல் பிறை நிலவு போல் இருப்பதால் இதற்கு பிறையாசனம் என்று பெயர்.
*முதலில் நேராக நின்று, இரு கைகளையும் மேலே உயர்த்தவும். *அடுத்து முதுகை பின்னோக்கி வளைக்கவும்.
*மெல்ல கைகளை கால் முட்டியின் பின்புறத்தில் வைக்கவும் *இந்த நிலையில் 20 வினாடிகள் இருந்து விட்டு, பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News September 7, 2025
தங்கம் விலை மேலும் உயர்கிறது

தங்கம் விலை அடுத்த 12 மாதங்களுக்கு குறைய வாய்ப்பில்லை எனவும், மேலும் உயரும் என்றும் தங்கம், வைரம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். <<17627852>>தங்கம் விலை<<>> நேற்று வரலாறு காணாத உச்சமாக 22 கேரட் 1 சவரன் ₹80,040-ஐ எட்டியது. ரிஸ்க் இல்லாத முதலீடு தங்கம் என்பதால், இதில் முதலீடுகள் அதிகரித்து வருவதால் இனி தங்கம், வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டும் என்றும் கணித்துள்ளார்.
News September 7, 2025
விசிகவுக்கு அதிக சீட்? திமுக பக்கா ப்ளான்

‘கூட்டணி ஆட்சி’ கோரிக்கை வலுத்துவரும் நிலையில், 2026-ல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் திமுக உள்ளதாம். இதனால் கடந்த முறையை விட இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு சீட் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, காங்., – 20, கம்யூ., கட்சிகள் – 8, IUML – 1 என கொடுக்க திட்டமிட்டுள்ளது. அதேநேரம், கடந்த முறையை விட (6) இந்த முறை விசிகவுக்கு 8 சீட்டுகள் வழங்க திமுக தயாராகி வருகிறது.