News April 1, 2025

HAPPY NEWS: மரணம் முடிவல்ல, மீண்டும் உயிர் பெறலாம்

image

இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்கிறார் அமெரிக்க விஞ்ஞானி சாம் பார்னியா. ஒருவர் மரணமடைந்த பின்னும் பல மணி நேரத்துக்கு, ஏன் சில நாள்களுக்கு கூட மூளை மீண்டும் உயிர்ப்பிக்கக் கூடிய நிலையில் இருக்கும். அதேபோல உடல் செல்களும் கூட சில நாள்கள் வரை அழிவதில்லை. அதனால், ECMO இயந்திரங்கள், சில குறிப்பிட்ட மருந்துகள் மூலம் மூளையை மீண்டும் உயிர் பெறச் செய்யலாம் என்கிறார் பார்னியா. இது வரமா? சாபமா?

Similar News

News November 23, 2025

இந்த Browser-ல் விளம்பரங்களே வராது!

image

கூகுள் குரோமுக்கு போட்டியாக Perplexity நிறுவனம் Comet பிரவுசரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது, இதில் நீங்கள் பல Tab-களை Open செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தேடும் அனைத்தும் ஒரே Tab-ல் சம்மரியாக கொடுக்கும் ‘Cross-Tab Summaries’ வசதி இதில் உள்ளது. இதில் ‘Ad Blocker’ இருப்பதால் விளம்பரம் வராது. இந்த பிரவுசர் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கும். SHARE.

News November 23, 2025

21 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சி, குமரி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதை

image

பன்முக வித்தகர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது தமிழ் தொண்டினை கௌரவிக்கும் விதமாக போலீஸ் மரியாதை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!