News February 18, 2025
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: இழப்பீடு அறிவித்தது அரசு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ₹498.80 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்து CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களை சேர்ந்த 5.18 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்று கூறிய அவர், இந்த நிவாரண நிதி ஓரிரு நாள்களில் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
Similar News
News September 13, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நிலவேம்பு!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
➥நிலவேம்பை உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து அருந்தி வந்தால், பித்தம் குறையும்.
➥நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து, காலை மாலை என குடித்து வந்தால், காய்ச்சல் குணமாகும்.
➥நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
➥நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். Share it to friends.
News September 13, 2025
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: CM ஸ்டாலின்

செப்.15-ம் தேதி தயாராக இருக்க திமுகவினருக்கு ஸ்டாலின் நாள்தோறும் புதிய கட்டளைகளை விடுத்து வருகிறார். தற்போது, ‘தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் ஆகியவற்றை எந்நாளும் காப்பேன்! ஆதிக்கச் சக்திகளின் முன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என உறுதிமொழி ஏற்க தயாராகுங்கள் என ஆணையிட்டுள்ளார். அண்ணாவின் பிறந்தநாளில் 1 கோடி பேர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளது.
News September 13, 2025
மத்திய அரசில் 1,543 வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷனில், களப்பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணிகளுக்கு 1,543 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, எலெக்ட்ரிக்கல்/சிவில் பிரிவுகளில் பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. (பொறியியல்) பட்டமும், 1 வருட அனுபவமும் அவசியம். இதற்கு, மாதம் ₹30,000-₹1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு செப்.17-க்குள் https://www.powergrid.in/en -ல் விண்ணப்பியுங்கள். SHARE பண்ணுங்க.