News June 9, 2024

துஷ்ட சக்திகளை தூர விரட்டும் அனுமன்

image

திருப்பதி மலையில் உள்ள ஆகாசகங்கையில் அமைந்திருக்கும் குகையில்தான் அனுமன் அவதரித்ததாக ஆஞ்சநேய புராணம் கூறுகிறது. தாய் அஞ்சனா தேவியுடன் கூடிய ஸ்ரீபால ஆஞ்சநேயர் தனிக் கோவில் கொண்டருளும் இந்த திருத்தலத்திற்கு சென்று, வெண்ணை காப்பு செய்து, துளசி மாலை சாற்றி, நெய் விளக்கேற்றி, செந்தூரத்தால் அர்ச்சித்து, மிளகு வடை படைத்து வழிபட்டால் துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீக பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதீகம்.

Similar News

News November 10, 2025

நாட்டை உலுக்கிய துயரம்… PM மோடி இரங்கல்

image

டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லி சம்பவம் குறித்து அமித்ஷா மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டறிந்து வருவதாகவும் அவர் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் உடல்நலம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.

News November 10, 2025

பெரும் சோகம்… நெஞ்சை உலுக்கும் PHOTOS

image

இன்று மாலை 6.52 மணிக்கு டெல்லியே பேரதிர்ச்சியில் ஸ்தம்பித்தது. செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடித்துச் சிதறியதில் உடல் சிதறி 10 பேர் பலியானது பெரும் துயரம். சம்பவ இடத்தின் போட்டோஸ் வெளியாகி காண்போரின் நெஞ்சை உலுக்குகின்றன. அதன்மூலம், கோர நிகழ்வின் தீவிரத்தையும் அங்கிருந்தவர்களின் மரண ஓலத்தையும் நம்மால் எளிதில் உணர முடிகிறது. உறவுகளை இழந்து தவிப்பவர்களை என்ன சொல்லி தேற்றுவது?

News November 10, 2025

அப்பாவி மக்கள் பலியானது வேதனை அளிக்கிறது: CM

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிப்பதாக அவர் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை சுக்குநூறாக நொறுக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!