News April 4, 2025
ஹன்சிகா வழக்கு.. காவல்துறைக்கு உத்தரவு

ஹன்சிகா மீது அவரது நாத்தனார் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னை கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் ஹன்சிகாவும் அவரது தாயாரும் தடுப்பதாக தெரிவித்திருந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி இருவரும் நீதிமன்றம் சென்றனர். இதையடுத்து காவல்துறை பதிலளிக்க கோரி வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு மும்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.
Similar News
News October 29, 2025
நவ.1-ம் தேதி முதல் ஆதாரில் வரும் முக்கிய மாற்றங்கள்

வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் ✱ஆதார் கார்டில் பெயர், விலாசம், DOB, போன் நம்பரை மாற்ற ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டிய அவசியம் இல்லை. ஈசியாக ஆன்லைனில் மாற்றலாம். PAN, பாஸ்போர்ட் ஆகியவற்றை வைத்து தரவு சரிபார்க்கப்படும் ✱ஆதாரில் மாற்றங்களை செய்ய ₹75 வசூலிக்கப்பட உள்ளது. மேலும், Biometric அப்டேட்களுக்கு ₹125 வசூலிக்கப்படும். முன்னதாக, இதற்கு ₹100 வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News October 29, 2025
ODI-யில் உச்சம் தொட்ட ஹிட்மேன்!

ICC வெளியிட்டுள்ள ODI பேட்ஸ்மேன்களின் தரவரிசையில், 781 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா முதல் இடம் பிடித்துள்ளார். நடந்து முடிந்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் அவர் ஒரு சதம், ஒரு அரைசதத்தை விளாசி, தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 38 வயதான ரோஹித் ஓய்வு பெற வேண்டும் என கருத்துக்கள் எழுந்த நிலையில், தனது பேட்டால் விமர்சனங்களுக்கு ஹிட்மேன் பதிலளித்துள்ளார்.
News October 29, 2025
வருமானத்தில் 80% நடிகருக்கு செல்கிறது: செல்வமணி

இன்று பல சூப்பர் ஸ்டார்களை, நடிகர்களை உருவாக்கிய தயாரிப்பாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டதாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேதனை தெரிவித்துள்ளார். படத்தின் மொத்த வருமானத்தில் 80% நடிகர்கள் எடுத்து செல்வதால், தயாரிப்பாளர்களால் அடுத்தடுத்து படம் எடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு படம் யாரால் வெற்றியடைகிறது என நடிகர்களுக்கு தெரியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.


