News April 4, 2025
ஹன்சிகா வழக்கு.. காவல்துறைக்கு உத்தரவு

ஹன்சிகா மீது அவரது நாத்தனார் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னை கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் ஹன்சிகாவும் அவரது தாயாரும் தடுப்பதாக தெரிவித்திருந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி இருவரும் நீதிமன்றம் சென்றனர். இதையடுத்து காவல்துறை பதிலளிக்க கோரி வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு மும்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.
Similar News
News November 20, 2025
அன்புமணியின் பேச்சு குழந்தைத்தனமானது: TRB ராஜா

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக அரசு பொய்சொல்வதாக அன்புமணி வைத்த குற்றச்சாட்டுக்கு TRB ராஜா பதில் அளித்துள்ளார். அதில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ள மொத்த தொகையும், முதல் நாளிலேயே முதலீட்டாளர்களால் செலவிடப்படும் என நினைப்பது குழந்தைத்தனமானது என தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் தரவுகளின்படி, வேகமாக வளர்த்து வரும் மாநிலமாக TN அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News November 20, 2025
தாயின் depression குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்குமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் மன அழுத்தத்தில் இருந்தால் அது குழந்தைக்கு பாதிப்பை எற்படுத்தும் என்பது பலரும் அறிந்ததே. ஆனால், தாயின் மன அழுத்தத்தினால் குழந்தையின் பாலினத்திற்கும் தொடர்புள்ளதாக நியூயார்க்கில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி அதிக மன அழுத்தம் இருந்தால் பெண் குழந்தையும், அதுவே குறைவாக இருந்தா ஆண் குழந்தையும் பிறக்கும் என கூறப்படுகிறது.
News November 20, 2025
Delhi Blast: அல்-ஃபலாஹ் பல்கலையில் 10 பேர் மிஸ்ஸிங்

டெல்லி குண்டுவெடிப்புக்கு அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திற்கும் பல தொடர்புகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி சம்பவத்திற்குப் பிறகு பல்கலை.,யை சேர்ந்த 10 பேர் காணாமல் போயுள்ளதாக உளவுத்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதில் 3 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. செல்போன்கள் சுவிட்ச் அஃபில் உள்ள நிலையில், அவர்களை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.


