News April 4, 2025

ஹன்சிகா வழக்கு.. காவல்துறைக்கு உத்தரவு

image

ஹன்சிகா மீது அவரது நாத்தனார் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னை கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் ஹன்சிகாவும் அவரது தாயாரும் தடுப்பதாக தெரிவித்திருந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி இருவரும் நீதிமன்றம் சென்றனர். இதையடுத்து காவல்துறை பதிலளிக்க கோரி வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு மும்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

Similar News

News December 12, 2025

தேர்தல் பணிகளை ஆலோசிக்க தமிழகம் வரும் அமித்ஷா

image

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் தமாகாவை தவிர வேறு கட்சிகள் இதுவரை இணையவில்லை. இதனிடையே நேற்று EPS-ஐ சந்தித்து ஆலோசனை நடத்திய நயினார் நாகேந்திரன், கள நிலவரத்தை தலைமையிடம் விளக்க நாளை டெல்லி செல்கிறார். இந்நிலையில் வரும் 15-ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகிறார். அப்போது கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.

News December 12, 2025

ஏறுமுகத்தில் இந்திய சந்தைகள்!

image

மும்பை தேசிய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. இதில், சென்செக்ஸ் 352 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 85,170 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 109 புள்ளிகள் உயர்ந்து, 26,007-ஐ எட்டியுள்ளது. உலகளாவிய சந்தைகளின் வலுவான ஆதரவு காரணமாக ஏற்றம் காணப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உலோக பங்குகளே அதிகம் லாபம் ஈட்டி, சந்தைக்கு ஊக்கமளித்துள்ளன.

News December 12, 2025

காதல் திருமண மோதல் வழக்கில் அதிரடி கைது!

image

மதம் மாறி திருமணம் செய்த இளைஞரின் குடும்பத்தினர் 4 பேரை சரமாரியாக வெட்டிய பெங்களூரு கும்பலில் 9 பேரை TN போலீசார் கைது செய்தனர். பெங்களூரு நாகவராவை சேர்ந்த ராகுல் டேனியல், அதே பகுதியை சேர்ந்த கீர்த்தனாவை காதலித்து வந்தார். வேளாங்கண்ணியில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் உறவினர்கள், டேனியல், அவரது அம்மா உள்ளிட்ட 4 பேரை வெட்டிவிட்டு கீர்த்தனாவை பெங்களூருவுக்கு கடத்தி சென்றனர்.

error: Content is protected !!