News August 17, 2024
26/11 தாக்குதல் குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்!

மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாக்., பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் தவாஹிர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 166 அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான 26/11 தாக்குதலுக்கு நிதியுதவி அளித்த அவரை அமெரிக்க போலீசார் கைது செய்து சிறையில் அடைந்திருந்தனர். இந்த நிலையில், அவரை Extradition Treaty-படி, இந்தியா அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Similar News
News September 16, 2025
நகைக்கடன்.. வங்கிக்கு படையெடுக்கும் தமிழக மக்கள்

2021 தேர்தலை போலவே, 2026 தேர்தலையொட்டி நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால், இதுவரை நகை அடமானக் கடன் வாங்காதவர்களும் கூட 3 – 5 சவரன் வரை நகைகளை வைத்து கடன் பெற, கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு இலக்கைவிட அதிக தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News September 16, 2025
மூலிகை: ஏழைகளின் நோய் விரட்டி எருக்கு!

விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது *செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில், எருக்க இலையை அடுக்கிக் காலால் மிதித்தால், குதிகால் வலி நீங்கும் *செடியின் இலைகளை நெருப்பில் போட்டு எரித்து, அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் *இலையை நெருப்பில் வாட்டி, கட்டிகள் மேல் கட்டினால், அவை உடையும். SHARE IT.
News September 16, 2025
பாக்.,வுடன் கைகுலுக்கவேண்டிய கட்டாயம் இல்லை: BCCI

ஆசிய கோப்பை போட்டியில் PAK அணியினருக்கு இந்திய வீரர்கள் கைக்கொடுக்காமல் போனதற்கு, போட்டி முடிந்தவுடன் கைகுலுக்க வேண்டும் என்பது எந்த விதியிலும் இல்லை என BCCI விளக்கமளித்துள்ளது. முன்னதாக, இந்தியாவின் இந்த செயலால் கடும் அதிருப்திக்கு உள்ளான பாக்., ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் புகாரளித்திருந்தது. இதனால், போட்டி முடிந்தவுடன் கைக்கொடுப்பது கட்டாயம் இல்லை என BCCI-யின் அதிகாரி கூறியுள்ளார்.