News August 17, 2024
26/11 தாக்குதல் குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்!

மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாக்., பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் தவாஹிர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 166 அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான 26/11 தாக்குதலுக்கு நிதியுதவி அளித்த அவரை அமெரிக்க போலீசார் கைது செய்து சிறையில் அடைந்திருந்தனர். இந்த நிலையில், அவரை Extradition Treaty-படி, இந்தியா அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Similar News
News November 14, 2025
11 மாவட்டங்களில் கனமழை அலர்ட்.. வருகிறது புயல் சின்னம்

வங்கக் கடலில் நவ.21-ல் புயல் சின்னம் உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இன்று தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியிலும், நவ.16-ல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நவ.17-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
News November 14, 2025
RRB-யில் 161 பணியிடங்கள்.. ₹35,400 வரை சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ✱காலியிடங்கள் 161 ✱கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ✱வயது: 18- 33 வரை ✱தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு ✱சம்பளம்: ₹35,400 ✱முழு தகவலுக்கு <
News November 14, 2025
வேலைக்கு செல்வோருக்கு ₹15,000 கொடுக்கும் அரசு

முதல் முறையாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ELI திட்டத்தின் மூலம் ₹15,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 6 மாதம் வேலை செய்த பிறகு முதல் தவணையும், ஒரு வருடத்திற்கு பிறகு, 2-வது தவணையும் வழங்கப்படும். இதனை பெற மாத சம்பளம் ₹1 லட்சத்திற்கு மிகாமலும், EPFO கணக்கும் வைத்திருக்க வேண்டும். இந்த தொகை EPFO உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் தானாகவே வரவு வைக்கப்படும். SHARE.


