News October 3, 2025
அமைதிக்கு உடன்படாத ஹமாஸ்: 57 பேர் பலி

டிரம்ப் வகுத்த அமைதி திட்டத்துக்கு இஸ்ரேல் PM ஒப்புக்கொண்டாலும், ஹமாஸ் செவிசாய்ப்பதாக இல்லை. இதனால் மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியதில், நேற்று 57 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காசாவில் 27 பேரும், உணவு விநியோக மையங்களில் 30 பேரும் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். காசாவிற்கு உதவி பொருள்கள் ஏற்றிவந்த கப்பல்களையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது.
Similar News
News October 3, 2025
BREAKING: சற்றுநேரத்தில் விஜய் வழக்கில் உத்தரவு

கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட் மதுரை கிளையில் தொடங்கியுள்ளது. விஜய் தரப்பும், தமிழக அரசு தரப்பும் காரசாரமாக வாதம் செய்து வருகின்றன. குறிப்பாக, கரூர் செல்ல விஜய்க்கு பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட மனுவில் முக்கிய உத்தரவு இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகவுள்ளது. இந்த உத்தரவை பொறுத்தே, விஜய் கரூர் செல்வாரா, இல்லையா என்பது குறித்து முடிவு தெரியும்.
News October 3, 2025
ஹாஸ்பிடலில் இருந்து கார்கே டிஸ்சார்ஜ்

திடீர் உடல்நலக்குறைவால் கடந்த செப்.30-ம் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் மல்லிகார்ஜுன கார்கே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசப்பிரச்னை இருந்ததால் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. தற்போது கார்கேவின் உடல்நிலை சீராக உள்ளதால் அவர் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருந்தாலும் டாக்டர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
News October 3, 2025
கரூர் துயரம்: கோர்ட் விசாரணை தொடங்கியது

கரூர் சம்பவம் தொடர்பான 9 வழக்குகளின் விசாரணை தொடங்கியுள்ளது. மதுரை HC-ல் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்க கோரிய மனு, N.ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு தொகையை உயர்த்த கோரிய மனு, தவெகவிற்கு தடை கோரிய மனு உள்ளிட்ட மனுக்களின் விசாரணை சற்றுமுன் தொடங்கியது.