News April 29, 2025
பஹல்காம் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பு?

ஹமாஸ் அமைப்பு உலகெங்கும் உள்ள தீவிரவாதிகளுக்கு முன்னுதாரணமாக மாறிவிட்டதாக இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரீவன் அசார் தெரிவித்துள்ளார். இஸ்ரேலை தாக்கும்போது, அதை லைவ் வீடியோவாக வெளியிட்டது உலக தீவிரவாதிகளுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்ததாகவும், அதன் பிறகு அந்த அமைப்பினர் PoK-க்கு அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கும், ஹமாஸ் தாக்குதலுக்கும் ஒற்றுமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2026
லாக்டவுன்.. முதல் நாடாக அறிவித்தது

மேற்காசிய போர் பதற்றத்தால், பாகிஸ்தானில் கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், PM ஷெபாஸ் ஷெரிஃப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இன்று முதல் பகுதியளவு பொதுமுடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கடைகள், வணிக வளாகங்கள் இரவு 8 மணிக்கு மூட வேண்டும். ஹோட்டல்கள், திருமண அரங்குகள் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2026
நீட் விலக்கு.. கார்த்தி சிதம்பரம் கொடுத்த வாக்கு

இம்முறை திமுகவின் தேர்தல் அறிக்கையில் நீட் ரத்து வாக்குறுதி இல்லையென விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இதைப் பற்றிப் பேசிய கார்த்தி சிதம்பரம், நீட் வேண்டாம் என்பதுதான் தமிழ்நாட்டின் பரவலான கருத்து, இதற்கு மற்ற மாநிலங்களும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி இருக்கும் வரை நீட்டுக்கு விலக்கு கிடைக்காது என்றார். மத்தியில் காங்., ஆட்சி அமைந்தால் நீட் விலக்கு அளிக்கலாம் என்றும் கூறினார்.
News April 7, 2026
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. இன்டர்நெட் முடக்கம்

மணிப்பூர் மொய்ராங் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தன. இதனால் <<19208220>>உள்ளூர் மக்களிடையே<<>> போராட்டம் வெடித்து, ஒரு லாரி தீக்கிரையாக்கப்பட்டதோடு, CRPF வீரர்களுடனான மோதல்களில் 19-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து 5 மாவட்டங்களில் இன்டர்நெட் முடக்கப்பட்டு, பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


