News March 14, 2025
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 – ஏப்.15 வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 4,88,876 பள்ளி மாணவர்கள், 25,888 தனித்தேர்வர்கள், 272 சிறைக்கைதிகள் என மொத்தம் 9,13,036 பேர் எழுதுகின்றனர். இந்நிலையில் இந்த தேர்வை எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. http://www.dge.tn.gov.in-ல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்க்கவும்.
Similar News
News March 14, 2025
எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம்: பாராட்டிய CM!

மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள், ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம் என தமிழக பட்ஜெட்டில் அனைவருக்குமான பல திட்டங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை இந்த பட்ஜெட் அமைத்து தந்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
News March 14, 2025
சென்னைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள்…

சென்னை அருகே 2,000 ஏக்கரில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம். வேளச்சேரியில் புதிய பாலம் அமைக்க ₹310 கோடி. திருவான்மியூர் – உத்தண்டி 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க ₹2,100 கோடி. ₹100 கோடியில் சென்னை அறிவியல் மையம். வண்ணாரப்பேட்டை, கிண்டியில் பன்முகப் போக்குவரத்து முனையம். குடிநீர் விநியோகிக்க ₹2,423 கோடி. மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்க ரூ.88 கோடி என பல திட்டங்கள் அறிவிப்பு.
News March 14, 2025
மீண்டும் EL-க்கு பணம்.. அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

<<15756270>>அரசு ஊழியர்கள்<<>> ஈட்டிய விடுப்பு (EL) சரண் செய்து பணமாக பெறும் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறும் முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வரும் ஏப்.1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும், ஆண்டுக்கு 15 நாள்கள் வரை சரண் செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.