News April 21, 2024

சிறையில் பாதி, ஜாமினில் மீதி…

image

INDIA கூட்டணி தலைவர்கள் பாதி பேர் ஜாமினில் வெளியே இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவோம் என ஆரம்பித்த எதிர்க்கட்சிகள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளன. யார் தவறு செய்தாலும் பிடிபடுவார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் ஊழல் செய்யும் போது இதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். தண்டனை அடையும் போது மட்டும் பாஜகவை அவர்கள் குறை கூறுவதாக அவர் தெரிவித்தார்.

Similar News

News January 31, 2026

தேசிய ஊடகத்திற்கு விஜய்யின் முதல் பேட்டி!

image

சென்னையில் NDTV TN கருத்தரங்கில் CM, EPS உள்ளிட்டோர் பங்கேற்ற நடைபெற்ற நிலையில், அச்செய்தி நிறுவன ஊடகவியலாளர்களை பனையூருக்கு அழைத்து விஜய் பேட்டி அளித்துள்ளார். தேசிய ஊடகத்திற்கான தனது முதல் பேட்டி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த விஜய், ஜன நாயகன் சென்சார், கரூர் சம்பவம் குறித்து கடும் வேதனை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது எதிர்காலம் இனி அரசியல் தான் என்றும் அவர் உறுதி செய்துள்ளாராம்.

News January 31, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 597 ▶குறள்: சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு. ▶பொருள்: உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.

News January 31, 2026

துணை முதல்வராக பதவி ஏற்கிறார் அஜித் பவார் மனைவி!

image

அஜித் பவார் மரணத்தையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டத்தில் சுனேத்ரா பவார் தலைவராக அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைவர் சகான் புஜ்பால் தெரிவித்துள்ளார். அதனையடுத்து மாலை 5 மணியளவில் அவர் துணை முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

error: Content is protected !!