News August 14, 2024
ஹஜ் யாத்திரை விண்ணப்பப்பதிவு தொடக்கம்

அடுத்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோருக்கு விண்ணப்பப்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இதற்கு செப்.9 வரை விண்ணப்பிக்கலாம். முதல்முறையாக இந்தாண்டில் https://hajcommittee.gov.in/ இணையதளத்துடன் சேர்த்து, HAJ Suvidha APP என்ற பிரத்யேக செயலி மூலமாகவும் விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. 2025ம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு இந்தியாவுக்கு 1,75,025 இடங்களை சவூதி அரேபியா ஒதுக்கியுள்ளது.
Similar News
News January 12, 2026
ஈரோட்டில் அடுத்தடுத்து கொள்ளை முயற்சி

ஈரோடு மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள 2 ஏடிஎம் மையங்களில் நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரங்களை சேதப்படுத்த முயன்றபோது, பாதுகாப்பு அலாரம் பலத்த சத்தத்துடன் ஒலிக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 12, 2026
FLASH: தொடர் சரிவால் தடுமாறும் இந்திய சந்தைகள்!

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 715 புள்ளிகள் சரிந்து 82,861 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 210 புள்ளிகள் சரிந்து 25,473 புள்ளிகளாகவும் வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தமுள்ள 4,252 நிறுவனங்களில் 3,189 நிறுவன பங்குகள் இச்சரிவை சந்தித்ததால், ₹6 லட்சம் கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புத்தாண்டு அன்று 85,451-ஆக இருந்த சென்செக்ஸ் தற்போது 2,600 புள்ளிகள் சரிந்துள்ளது.
News January 12, 2026
இவர் தூய்மை பணியாளர் மட்டுமில்ல.. தூய்மையானவர்!

மனித மனம் எப்போதும் தடுமாறக்கூடியதே. ஆனால், சென்னையை சேர்ந்த பத்மா, தன் வேலையை போலவே மனதளவிலும் தூய்மையானவராகவே உள்ளார். சென்னை தி.நகரில் அவர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, 45 சவரன் தங்க நகைகள் கிடைத்துள்ளன. உடனே, அதனை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சுமார் ₹48 லட்சம் மதிப்பிலான நகைகளை தவறவிட்ட ரமேஷ் என்பவரிடம் நகை ஒப்படைக்கப்பட, பத்மாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. Salute மேடம்!


