News March 24, 2025

எச்.ராஜாவுக்கு மனநலம் சரியில்லை: சுப.வீ.,

image

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தான் காரணம் என்று நேற்று எச்.ராஜா பேசியது பெரும் சர்ச்சையானது. இதுகுறித்து சுபவீ., எச்.ராஜாவுக்கு மனநலம் சரியில்லையோ என தோன்றுகிறது. அவர் நாகரிகமாக பேசினால்தான் ஆச்சரியம்; அநாகரிகமாக பேசி பேசியே அழிந்துவிட்டார் என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், மனுநீதியால் ஏற்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகள் தான் ஆணவப் படுகொலைகளுக்கு காரணம் எனவும் சாடினார்.

Similar News

News November 16, 2025

பொங்கல் விடுமுறை.. வந்தது HAPPY NEWS

image

பொங்கல் விடுமுறையையொட்டி தமிழகத்தில் 500+ சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சொந்த ஊர் செல்லும் பயணிகளின் நலன் கருதி வழக்கமான ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்படும் என்றும், மதுரை, திருச்சிக்கு முன்பதிவில்லா மெமு ரயில்கள் இயக்க பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பெட்டிகள் அதிகரிப்பால் Waiting List பற்றி கவலைப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News November 15, 2025

தவெக தொண்டர்களுக்கு N.ஆனந்த் அழைப்பு

image

SIR-க்கு எதிராக தவெக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என N.ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார். SIR பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் இருப்பதாகவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார் . SIR-க்கு எதிராக நாளை காலை 11 மணி அளவில் தவெக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 15, 2025

இறந்தவர்கள் மீண்டும் உயிருடன் வர முடியுமா?

image

மனிதனை ஆச்சரியப்படுத்தும் கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கிறது. அப்படி விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஒன்றுதான் cryopreservation. அதாவது, ஒரு சடலம் -196°C வெப்பநிலையில் திரவ நைட்ரஜனில் புதைக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. ரத்தம் உறைதல், செல்களுக்கு சேதம் ஏற்படுவதைத் இது தடுக்கிறது. ஒருவேளை எதிர்காலத்தில் இறந்த ஒருவரை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பம் வந்தால், இந்த உடல் பயன்படுத்தப்படும்.

error: Content is protected !!