News March 24, 2025
எச்.ராஜாவுக்கு மனநலம் சரியில்லை: சுப.வீ.,

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தான் காரணம் என்று நேற்று எச்.ராஜா பேசியது பெரும் சர்ச்சையானது. இதுகுறித்து சுபவீ., எச்.ராஜாவுக்கு மனநலம் சரியில்லையோ என தோன்றுகிறது. அவர் நாகரிகமாக பேசினால்தான் ஆச்சரியம்; அநாகரிகமாக பேசி பேசியே அழிந்துவிட்டார் என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், மனுநீதியால் ஏற்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகள் தான் ஆணவப் படுகொலைகளுக்கு காரணம் எனவும் சாடினார்.
Similar News
News December 10, 2025
8 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்

தமிழகத்தில் காலை 7 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 15-ம் தேதி வரை மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
உலகின் டாப் 10 அழகான நடிகைகள்

2025 நிறைவடைய உள்ள நிலையில், IMDB பட்டியலிட்டுள்ள இந்த ஆண்டின் டாப் 10 அழகான நடிகைகளை இங்கு பார்க்கலாம். ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள நடிகைகளின் அழகை அலசி ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இந்திய நடிகை மட்டும் இடம்பிடித்துள்ளார். இவர்களின் போட்டோக்களை மேலே தொகுத்துள்ளோம். ஒவ்வொன்றாக Swipe செய்து பார்த்து, உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்பதை கமெண்ட் பண்ணுங்க.
News December 10, 2025
ஆணவக்கொலை வழக்கை இழுத்தடிக்கும் அரசு: கௌசல்யா

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கை தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக கௌசல்யா குற்றஞ்சாட்டியுள்ளார். கொலைக்கு காரணமானவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து SC-யில் மேல்முறையீடு செய்தோம். அங்கு துணையாக நிற்க வேண்டிய அரசு மெத்தனப்போக்கு காட்டியது. நீதி கிடைத்தால் சாதிய வாக்குகள் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில், வழக்கை இழுத்தடிக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


