News April 14, 2025
இது என்ன படம்னு கண்டுபிடிங்க

போலீஸ் ஒருத்தரை எதிரிங்க கொன்னுடுறாங்க. அவர் மனைவிக்கும் விஷம் கொடுத்துடுறாங்க. அதனால, அவங்களுக்கு பிறக்குற இரட்டை குழந்தைகள்ல ஒரு குழந்தை ஊனமா பிறக்குது. 25 வருஷம் கழிச்சு, அந்த போலீசை கொன்னவங்க ஒவ்வொருத்தரா இறந்து போறாங்க. அவங்களை யாரு கொன்னதுங்குற சுவாரஸ்யமான திரைக்கதையோட உருவாக்கப்பட்ட படம்தான் இது. இப்படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆகுது. கண்டுபிடிச்சுட்டீங்களா?!
Similar News
News November 21, 2025
குளிர்காலத்தில் நரம்பை பலப்படுத்தும் பெஸ்ட் உணவுகள்

* ஆப்பிள், பேரிக்காய், ஆரஞ்சு, ஸ்டிராபெர்ரி, திராட்சை, ப்ளம்ஸ் ஆகிய குறைந்த கலோரி மற்றும் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
*முந்திரி, பாதாம், வால்நட் ஆகிய வைட்டமின் பி நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகள் ஆகியவற்றை தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளலாமாம்.
*அசைவ உணவுகள் பொருத்தவரையில் ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன் வகைகள் சிறந்ததாம்.
News November 21, 2025
CINEMA 360°: ‘அமரன்’ படத்துக்கு சிறப்பு கௌரவம்

*50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி மீண்டும் ‘SHOLAY’ படம் வெளியாகிறது. *’டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசரை இன்று ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். *கவினின் ‘மாஸ்க்’ படத்தின் 4-வது சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. * 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக ‘அமரன்’ திரையிடப்படுகின்றது.
News November 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 526
▶குறள்:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
▶பொருள்: பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.


