News August 26, 2024
காவலர் வேலைவாய்ப்பு.. நாளை முதல் விண்ணப்பப் பதிவு

NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் வேலைகளுக்கு ஆட்தேர்வு தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நாளை வெளியிடவுள்ளது. ssc.gov.in. என்ற இணையதளத்தில் நாளை அறிவிப்பு வெளியானதும் NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காவலர் வேலைக்கு உடனடியாக விண்ணப்பப் பதிவு தொடங்கும். விருப்பமுள்ளோர் அந்த தளத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News December 22, 2025
மலேசிய முருகனை மிஞ்சிய உயரமான கடவுள் சிலைகள்!

உயரமான கடவுள் சிலை என்றாலே பலருக்கும் மலேசிய முருகன்தான் நினைவுக்கு வருவார். ஆனால், அவரைவிட உயரமான கடவுள் சிலைகள் இங்கு உள்ளன. அப்படி உலகின் டாப் 9 உயரமான கடவுள் சிலைகளின் லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். யார் யார் இருக்காங்க என பார்க்க, மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்யவும். அதேபோல, நீங்க மட்டுமே ரசிக்காம, உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. நீங்க இதில் எந்த கோயிலுக்கு போயிருக்கீங்க?
News December 22, 2025
கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் கொடுத்த வாக்குறுதி

அன்பும் கருணையும்தான் அனைத்திற்கும் அடிப்படை என விஜய் கூறியுள்ளார். தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அவர், சமூக, சமய நல்லிணக்கத்தை காப்பதில் 100% உறுதியாக இருப்போம் என உறுதியளித்தார். மேலும், தமிழ்நாட்டு மண் தாயன்பு கொண்ட மண் எனவும் அந்த தாய்க்கு அனைத்து பிள்ளைகளும் ஒன்றுதான் என்றும் அவர் பேசியுள்ளார்.
News December 22, 2025
சாரி அம்மா, அப்பா.. என்னால படிக்க முடியல!

சத்தீஸ்கர் யூனிவர்சிட்டியில் 2-ம் ஆண்டு Engg., படித்து வந்த மகளுக்கு பெற்றோர் போன் செய்துள்ளனர். அவர் போனை எடுக்காததால், வார்டனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில், மகள் எழுதி வைத்திருந்த Suicide Note தான் கிடைத்துள்ளது. முதல் செமஸ்டரில் 5 அரியர் வைத்திருந்த மகள், ‘சாரி மம்மி, டாடி, உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியல’ என எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


