News August 26, 2024
காவலர் வேலைவாய்ப்பு.. நாளை முதல் விண்ணப்பப் பதிவு

NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் வேலைகளுக்கு ஆட்தேர்வு தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நாளை வெளியிடவுள்ளது. ssc.gov.in. என்ற இணையதளத்தில் நாளை அறிவிப்பு வெளியானதும் NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காவலர் வேலைக்கு உடனடியாக விண்ணப்பப் பதிவு தொடங்கும். விருப்பமுள்ளோர் அந்த தளத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News December 30, 2025
விஜய்க்கு முதல் முறையாக EPS பதில்

புதுச்சேரி பரப்புரையில், களத்தில் இல்லாதவர்களை எல்லாம் விமர்சிக்க முடியாது என விஜய் கூறியிருந்தார். இந்நிலையில், இன்றைக்கு யார் யாரோ பேசிக் கொண்டிருக்கிறார்கள், புதிதாக கட்சி தொடங்கியவரும் பேசுகிறார் என EPS மறைமுகமாக விமர்சித்துள்ளார். மேலும் KP முனுசாமி, செல்லூர் ராஜு உள்ளிட்ட மூத்த தலைவர்களும் விஜய்யை விமர்சித்து வருவது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
News December 30, 2025
வங்கதேச EX PM மறைவுக்கு PM மோடி இரங்கல்!

வங்கதேச EX PM பேகம் கலிதா ஜியா டாக்காவில் காலமான செய்தியறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்ததாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியா-வங்கதேச உறவுக்கும் அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்புகள் எப்போதும் நினைவில் இருக்கும். 2015-ம் ஆண்டு டாக்காவில் அவரை நான் சந்தித்த இனிய சந்திப்பை நினைவுகூர்கிறேன் என மோடி குறிப்பிட்டுள்ளார்.
News December 30, 2025
ரஜினியின் லிஸ்ட்டில் அஸ்வத் மாரிமுத்து?

சுந்தர்.சி வெளியேறி நிலையில், கமல் தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், ‘டிராகன்’ அஸ்வத் மாரிமுத்து ரஜினியிடம் கதை ஒன்றை கூறினாராம். அது அவருக்கு மிகவும் பிடித்து போக, அக்கதையில், கமலின் RKFI தயாரிப்பில் நடிக்க முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது.


