News August 26, 2024

காவலர் வேலைவாய்ப்பு.. நாளை முதல் விண்ணப்பப் பதிவு

image

NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் வேலைகளுக்கு ஆட்தேர்வு தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நாளை வெளியிடவுள்ளது. ssc.gov.in. என்ற இணையதளத்தில் நாளை அறிவிப்பு வெளியானதும் NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காவலர் வேலைக்கு உடனடியாக விண்ணப்பப் பதிவு தொடங்கும். விருப்பமுள்ளோர் அந்த தளத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT

Similar News

News December 29, 2025

FLASH: மீண்டும் சிறைக்கு செல்லும் குல்தீப் சிங் செங்கார்

image

2017 உன்னாவ் பாலியல் வழக்கில் கைதான பாஜக Ex MLA குல்தீப் செங்காரின் ஆயுள் தண்ட னையை டெல்லி HC நிறுத்திவைத்தது. இதற்கு எதிராக CBI தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், HC-ன் உத்தரவுக்கு SC இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர் மீண்டும் சிறைக்கு செல்ல உள்ளார்.

News December 29, 2025

NLC-ல் 575 பணியிடங்கள்.. தேர்வு இல்லாமல் சூப்பர் வாய்ப்பு!

image

NLC-ல் 575 அப்ரண்டீஸ் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: B.E., Diplomo. தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. சம்பளம்: ₹12,524 – ₹15,028. விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். பின்னர் விண்ணப்பத்தை The Office of The General Manager, Learning and Development Centre, Block- 20, NLC India Limited, Neyveli – 607 803 என்ற முகவரிக்கு ஜன.2-க்குள் அனுப்பவும்.

News December 29, 2025

திமுக கூட்டணியில் காங்., நீடிக்குமா? வந்தது விளக்கம்

image

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்., குழு அமைத்த பிறகு, கூட்டணி பற்றி சந்தேகமே வேண்டாம் என முத்தரசன் கூறியுள்ளார். கடந்த 4 தேர்தல்களாக திமுக கூட்டணி கொள்கை பிடிப்புடன் உறுதியாக இருப்பதாக தெரிவித்த அவர், 2026-ல் கூட்டணி நீடித்து பெருவெற்றியை பெறும் என பேசியுள்ளார். அத்துடன், எதிர்த் தரப்பில், EPS-ஆல் கூட்டணியும் அமைக்க முடியவில்லை, கட்சியையும் ஒருங்கிணைக்க முடியவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!