News August 26, 2024
காவலர் வேலைவாய்ப்பு.. நாளை முதல் விண்ணப்பப் பதிவு

NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் வேலைகளுக்கு ஆட்தேர்வு தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நாளை வெளியிடவுள்ளது. ssc.gov.in. என்ற இணையதளத்தில் நாளை அறிவிப்பு வெளியானதும் NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காவலர் வேலைக்கு உடனடியாக விண்ணப்பப் பதிவு தொடங்கும். விருப்பமுள்ளோர் அந்த தளத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News December 25, 2025
இடியாப்பத்திற்கு வந்த இடியாப்ப சிக்கல்!

சைக்கிள் மற்றும் பைக்கில் இடியாப்பம் விற்பவர்கள் உரிமம் பெறுவது கட்டாயம் என தமிழக உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இடியாப்பத்தை முறையாக தயாரிக்காமல் விற்பதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைனில் இலவசமாக உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பிப்பது கட்டாயம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
News December 25, 2025
உலகப்போரை நிறுத்திய கிறிஸ்துமஸ் பெருவிழா!

1914-ல் முதல் உலகப்போரில் ஜெர்மன்-பிரிட்டிஷ் வீரர்கள் கடுமையாக போரிட்டு கொண்டிருந்த சமயம். டிச., 24-ம் தேதி இரவு, ஜெர்மன் பகுதியில் துப்பாக்கி சத்தத்திற்கு பதிலாக, இனிய கிறிஸ்துமஸ் கீதம் ஒலித்தது. மறுநாள் களத்தில் இருந்த இருநாட்டு வீரர்களும் உணவுகளை பரிமாறி ஃபுட்பால் விளையாடினர். தளபதிகளின் உத்தரவு இல்லாமல் நிகழ்ந்த இந்த ஒருநாள் போர் நிறுத்தம், மனிதநேயத்தின் சாட்சியாக வரலாற்றில் நீடிக்கிறது.
News December 25, 2025
அஜிதா ஹாஸ்பிடலில் அனுமதி.. விஜய் கடும் அப்செட்!

தூத்துக்குடி தவெக <<18649222>>நிர்வாகி அஜிதா ஆக்னல்<<>> உயிருக்கு ஆபத்தான நிலையில், ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு வழங்கப்படாததால் நேற்று முன்தினம் தவெக ஆபிஸ் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதோடு விஜய்யின் காரை வழிமறித்தார். பதவி கிடைக்காத அதிருப்தியில் 2 நாள்களாக சாப்பிடாமல் இருந்த அஜிதா, உடல் நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், விஜய் கடும் அப்செட் ஆகியுள்ளாராம்.


