News August 26, 2024
காவலர் வேலைவாய்ப்பு.. நாளை முதல் விண்ணப்பப் பதிவு

NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் வேலைகளுக்கு ஆட்தேர்வு தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நாளை வெளியிடவுள்ளது. ssc.gov.in. என்ற இணையதளத்தில் நாளை அறிவிப்பு வெளியானதும் NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காவலர் வேலைக்கு உடனடியாக விண்ணப்பப் பதிவு தொடங்கும். விருப்பமுள்ளோர் அந்த தளத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News December 17, 2025
BREAKING: முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

காலநிலை மாற்றம் தொடர்பான இன்றைய நிர்வாகக் குழு கூட்டத்தில், மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை காலநிலை கல்வியறிவு பற்றிய பயிற்சிகள் வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 297 பசுமைப் பள்ளிகளில் Cool Roofing திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். பசுமை பள்ளி என்பது மாணவர்கள் மூலம் மழைநீர் சேகரிப்பு, காய்கறி தோட்டம் உருவாக்குவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த திட்டம் ஆகும்.
News December 17, 2025
இது கிரிக்கெட்டர்களின் கோலிவுட்!

நம் மனதில் தோன்றும் எந்த ஒரு விஷயத்தையும், AI மூலம் திரையில் பார்த்து விடலாம் அல்லவா! இந்திய கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களானால் எப்படி இருக்கும்.. ஒரு சின்ன கற்பனை. இதுவே மேலே உள்ள போட்டோக்களின் சாராம்சம். கண்டிப்பாக கோலியின் Recreation ஆச்சரியப்படுத்தும். அதை பார்க்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணுங்க. இந்த லிஸ்ட்டில் யாரை எந்த படத்தில் Recreate செய்யலாம் என கமெண்ட் பண்ணுங்க?
News December 17, 2025
BREAKING: கொந்தளித்தார் ஓபிஎஸ்

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நீண்ட நாள்களுக்குபின் OPS அறிக்கை வெளியிட்டுள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றான ’விக்ஷித் பாரத்’ சட்ட முன்வடிவை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திய அவர், ஏற்கெனவே நிதிப் பகிர்வின் மூலம் குறைந்த ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு, இச்சட்ட முன்வடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளதாக கடுமையாக சாடியுள்ளார்.


