News August 26, 2024
காவலர் வேலைவாய்ப்பு.. நாளை முதல் விண்ணப்பப் பதிவு

NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் வேலைகளுக்கு ஆட்தேர்வு தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நாளை வெளியிடவுள்ளது. ssc.gov.in. என்ற இணையதளத்தில் நாளை அறிவிப்பு வெளியானதும் NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காவலர் வேலைக்கு உடனடியாக விண்ணப்பப் பதிவு தொடங்கும். விருப்பமுள்ளோர் அந்த தளத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News December 13, 2025
மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீருடன் இரங்கல்

கிளிகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த <<18542461>>’பறவை மனிதர்’<<>> ஜோசப் சேகரின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த இந்த மாமனிதரின் இறுதிக்காலம் மகிழ்ச்சியாக அமையவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜோசப் சேகர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவரது இழப்புக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News December 13, 2025
ICC போட்டிகள் ஜியோஸ்டாரில் ஒளிபரப்பாகும்

இந்தியாவில், ICC போட்டிகளை ஒளிபரப்புவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து JioStar வெளியேறவில்லை என ICC தெரிவித்துள்ளது. $3 பில்லியன் நிதியிழப்பால், 2027 வரை போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து Jiostar வெளியேறுவதாக தகவல் கசிந்தது. இது உண்மையல்ல என்றும், இந்தியாவில் ஐசிசி போட்டிகளை ஒளிபரப்புவதில் Jiostar உறுதியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், Jiostar வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News December 12, 2025
விமான சேவைகள் சீரானது: இண்டிகோ

FDTL விதிகளை பின்பற்ற முடியாமல் INDIGO, கடந்த ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்தது. இந்நிலையில் 138 நகரங்களை இணைக்கும் வகையில், இன்று 2,050 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக INDIGO கூறியுள்ளது. தங்களது சேவை டிச.9 சீரடைந்துள்ளதாகவும், உரிய நேரத்திற்கு விமானங்கள் புறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, DGCA உத்தரவினால் 10% சேவைகளை INDIGO குறைத்தது குறிப்பிடத்தக்கது.


