News August 26, 2024
காவலர் வேலைவாய்ப்பு.. நாளை முதல் விண்ணப்பப் பதிவு

NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் வேலைகளுக்கு ஆட்தேர்வு தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நாளை வெளியிடவுள்ளது. ssc.gov.in. என்ற இணையதளத்தில் நாளை அறிவிப்பு வெளியானதும் NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காவலர் வேலைக்கு உடனடியாக விண்ணப்பப் பதிவு தொடங்கும். விருப்பமுள்ளோர் அந்த தளத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News December 21, 2025
அஜித் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான அப்டேட்!

அஜித்தின் கார் ரேஸிங் ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கிவருகிறார். இந்நிலையில் இதற்கு சாம் CS இசையமைக்கவுள்ளார் என பேசப்படுகிறது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அஜித்துடன் 100% பணியாற்றுகிறேன். அது என்ன என்பது பற்றி விரைவில் தெரியவரும் என ஹிண்ட் கொடுத்திருந்தார். இதனால் இவர்தான் டாக்குமெண்ட்ரிக்கு இசையமைக்கிறார் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News December 21, 2025
BREAKING: டிச.26 முதல் ரயில் கட்டணம் உயர்வு

கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக டிச.26 முதல் ரயில் பயணத்திற்கு புதிய கட்டண முறை அமலுக்கு வரவுள்ளது. 215 கி.மீ., வரை சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு கட்டண உயர்வில்லை. 215 கி.மீ.க்கு மேல் சாதாரண வகுப்பில் பயணித்தால் கி.மீ.,க்கு 1 பைசா உயரும். 215 கி.மீ.க்கு மேல் மெயில் & விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு கி.மீ.,க்கு 2 பைசா கட்டணம் உயர்கிறது. Non AC-ல் 500 கி.மீ பயணிக்க ₹10 கூடுதலாக வசூலிக்கப்படும்.
News December 21, 2025
இனி பெட்ரோல், டீசல் கிடையாது!

மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதை நிறுத்துமாறு ஒடிசா போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பல நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் பொது சுகாதாரத்தை நோக்கமாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லியில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.


