News August 26, 2024
காவலர் வேலைவாய்ப்பு.. நாளை முதல் விண்ணப்பப் பதிவு

NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் வேலைகளுக்கு ஆட்தேர்வு தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நாளை வெளியிடவுள்ளது. ssc.gov.in. என்ற இணையதளத்தில் நாளை அறிவிப்பு வெளியானதும் NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காவலர் வேலைக்கு உடனடியாக விண்ணப்பப் பதிவு தொடங்கும். விருப்பமுள்ளோர் அந்த தளத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News December 31, 2025
ஈரோடு: 10th போதும் சத்துணவு மையத்தில் வேலை

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 64 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்-ரூ.3000 முதல் ரூ.9,000 ஆகும். விண்ணப்பங்களை https://erode.nic.in/ என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து ஜன.9.26-க்குள் மாநகராட்சி, நகராட்சி அலுவலங்களில் வழங்க வேண்டும். (SHARE பண்ணுங்க)
News December 31, 2025
2025 REWIND: ஒரே ஆண்டில் ₹43,200 அதிகரித்த தங்கம்!

ஜனவரி 1, 2025-ல் ஒரு சவரன் தங்கம் ₹57,200-க்கு விற்பனையான நிலையில், வருடத்தின் கடைசி நாளான இன்று ₹1,00,400-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஒரு சவரன் ₹43,200 அதிகரித்துள்ளது. அதே போல, ஜனவரி 1, 2025-ல் ஒரு வெள்ளி கிலோ ₹98,000-க்கு விற்பனையான நிலையில், இன்று ₹2,58,000-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் கிலோ ₹1,60,000 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 31, 2025
தலையீடு இல்லை: சீனாவுக்கு இந்தியா பதிலடி

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா-பாக்., இடையே மத்தியஸ்தம் செய்ததாக <<18719653>>சீனா தெரிவித்தது<<>>. இந்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையில் 3-ம் தரப்பு இடம்பெறவில்லை என்று இந்தியா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. சண்டை நிறுத்தம், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் ஆலோசித்த எடுத்த முடிவு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.


