News August 3, 2024

நோட்டீஸை திரும்ப பெற்ற ஜிஎஸ்டி அதிகாரிகள்

image

இன்ஃபோஸிஸ் நிறுவனம் ₹32,403 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வழங்கப்பட்ட நோட்டீஸை கர்நாடகா மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் திரும்ப பெற்றனர். இது குறித்து மத்திய ஜிஎஸ்டி புலனாய்வுத்துறையிடம் அந்நிறுவனம் விளக்கம் அளிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். முன்னதாக 2017 ஜூலை – 2022 மார்ச் வரையில், அந்நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளில் இருந்து பெற்ற ஐடி சேவைகளுக்காக வரி செலுத்தவில்லை என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Similar News

News November 20, 2025

மெட்ரோ விவகாரத்தில் நடந்தது என்ன? மத்திய அரசு விளக்கம்

image

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் பாஜக அரசியல் செய்வதாக CM ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில், TN அரசு பரிந்துரைத்துள்ள 7 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை எனவும் அதனால்தான் திருப்பி அனுப்பியதாகவும் மத்திய அமைச்சர் மனோகர்லால் விளக்கமளித்துள்ளார். மேலும், மக்களுக்கான மெட்ரோ திட்டத்தை ஸ்டாலின் தான் அரசியல் ஆக்குகிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News November 20, 2025

உலகின் மீள நீளமான 7 நதிகள்!

image

நதிகள் என்பவை ஒவ்வொரு கண்டத்தின் நிலப்பரப்பிலும் ஆழமாக பதிந்திருக்கும் பூமியின் ரத்த நாளங்கள் போன்றவை. உலகிலேயே மிகவும் நீளமாக உள்ள நதி 11 நாடுகள் வழியாக பாய்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுமட்டுமல்ல நமது கங்கை நதியை விட மூன்று மடங்கும் அதிக நீளம் கொண்டது. எந்த நதி என்று தெரிந்து கொள்ளவும், உலகின் மிக நீளமான மற்ற நதிகள் எதுவென்று அறியவும் மேலே SWIPE பண்ணுங்க.

News November 20, 2025

BREAKING: தமிழக அரசுக்கு வெற்றி.. பரபரப்பு தீர்ப்பு

image

பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஒரு நியாயமான காலத்திற்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஒரு மாநிலத்திற்கு 2 அதிகார அமைப்புகள் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மசோதா காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டால் கோர்ட் ஆய்வு செய்யும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால், TN அரசுக்கு கிடைத்த வெற்றி என அரசு தரப்பினர் கொண்டாடுகின்றனர்.

error: Content is protected !!