News August 3, 2024
நோட்டீஸை திரும்ப பெற்ற ஜிஎஸ்டி அதிகாரிகள்

இன்ஃபோஸிஸ் நிறுவனம் ₹32,403 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வழங்கப்பட்ட நோட்டீஸை கர்நாடகா மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் திரும்ப பெற்றனர். இது குறித்து மத்திய ஜிஎஸ்டி புலனாய்வுத்துறையிடம் அந்நிறுவனம் விளக்கம் அளிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். முன்னதாக 2017 ஜூலை – 2022 மார்ச் வரையில், அந்நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளில் இருந்து பெற்ற ஐடி சேவைகளுக்காக வரி செலுத்தவில்லை என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
Similar News
News November 23, 2025
NATIONAL 360°: துப்பாக்கி வெடித்து காவலர் பலி

*ஹரியானாவில் 18 வயது பூர்த்தியாகாத நபர் ஓட்டிய கார் மோதியதில் 8 வயது சிறுவன் பலியான சோகம். *குஜராத்தில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பள்ளி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்த நபரை தேடி வரும் போலீசார். *ஜார்க்கண்டில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் காவலர் பலி. *மகாராஷ்டிரா DCM அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்.
News November 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 527
▶குறள்:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
▶பொருள்: அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.
News November 23, 2025
டெல்லி காற்றுமாசு: 50% பேருக்கு WFH கொடுக்க அறிவுறுத்தல்

டெல்லியில் காற்றுமாசு நாளுக்கு நாள் மிக மோசமாகி வரும் நிலையில் முக்கிய முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்த வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மக்கள் குப்பைகள் எரிக்க கூடாது என தெரிவித்துள்ள சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங், அவ்வாறு செய்பவர்கள் குறித்து புகார் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.


