News October 29, 2025

குரூப் 4 தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற உத்தரவு

image

குரூப் 4 தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள், தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய TNPSC அறிவுறுத்தியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்காக முதற்கட்ட தேர்வர்களின் பட்டியலை TNPSC வெளியிட்டுள்ள நிலையில், அவர்கள் இன்று முதல் நவ.7-ற்குள் ஒருமுறை பதிவு பிரிவில் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். உரிய நேரத்திற்குள் பதிவேற்ற தவறினால், அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News October 29, 2025

விசிகவுக்கு அதிக சீட் கொடுக்க திமுகவுக்கு பயம்: திருமா

image

வரும் சட்டமன்ற தேர்தலில் விசிக கேட்கும் சீட்களை திமுக வழங்குமா என திருமாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விசிகவுக்கு அதிக சீட்களை கொடுத்தால், கூட்டணிக்குள் பிரச்னை வருமோ என திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் அச்சப்படுவதாக கூறியுள்ளார். ஆனால், இதற்காக விசிக அமைதியாக இருக்காது எனவும், தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சீட்களை கேட்டுப்பெறும் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.

News October 29, 2025

Spam Call-களுக்கு செக் வைக்க TRAI முடிவு

image

Spam Call-களை கட்டுப்படுத்த TRAI முக்கிய முடிவை எடுத்துள்ளது. இனி உங்களுக்கு போன் செய்பவர்களின் உண்மையான பெயர்கள், மொபைல் டிஸ்பிளேயில் தெரியவரும். இதற்கான முன்மொழிவிற்கு TRAI ஒப்புதல் அளித்துள்ளது. ஒருவர் சிம் கார்டு வாங்கும் போது கொடுத்த ஆவணங்களில் இருந்து இந்த ‘Calling Name Presentation’ செயல்படுத்தப்பட உள்ளது. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில், Truecaller போன்ற 3-ம் நிலை செயலிகள் தேவைப்படாது.

News October 29, 2025

ரஷ்மிகாவுக்கு இருக்கும் உச்சபட்ச ஆசை இதுதான்

image

மற்ற துறைகளை போல சினிமாவிலும் 8 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாக ரஷ்மிகா தெரிவித்துள்ளார். சினிமாவில் உள்ள அனைவருக்கும் குடும்பமும் தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறது என கூறிய அவர், குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், அதிகமாக வேலை செய்து ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டு விட்டேனே என பிற்காலத்தில் கவலைப்பட விரும்பவில்லை எனவும் பேசியுள்ளார்.

error: Content is protected !!