News March 20, 2025
அசிங்கமாக பேசிய Grok.. களமிறங்கிய IT அமைச்சகம்

X AI சாட்போட்டான Grok, பயனர்களின் கேள்விக்கு, ஆபாசமாக பதிலளித்தது குறித்து மத்திய IT அமைச்சகம் விசாரித்து வருகிறது. ஏன் இவ்வாறு நடந்தது என X நிறுவன ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு Grok நீண்ட நேரம் பதிலளிக்காமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், ஹிந்தியில் கொச்சையாக மீண்டும் கேள்வி எழுப்பியதால், அதுவும் கொச்சையாக பதிலளித்தது.
Similar News
News July 7, 2025
வார விடுமுறை… சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்

மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்களின் முதல் ஆசை மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்பதே. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஜூலை 11 – ஆக. 17 வரை வெள்ளி, ஞாயிறுகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதேபோல், ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே ஜூலை 12 – ஆக. 18 வரை சனி, திங்களில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. டூர் போக ரெடியா..!
News July 7, 2025
பெரிய மாற்றமின்றி முடிவடைந்த பங்குச்சந்தை

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை பெரிய மாற்றமின்றி முடிவடைந்துள்ளது. அதன்படி சென்செக்ஸ் 9.61 புள்ளிகள் உயர்ந்து 83,442.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி 0.30 புள்ளிகள் உயர்ந்து 25,461.30 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிந்துள்ளது. பெரிய ஏற்றத்தாழ்வு இன்றி பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவுபெற்றுள்ளது.
News July 7, 2025
அஜித் மரணம்… விசாரணை அறிக்கை நாளை தாக்கல்

போலீஸ் கஸ்டடியில் அஜித் குமார் உயிரிழந்தது தொடர்பான விசாரணை அறிக்கை நாளை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 2-ம் தேதி முதல் ஜட்ஜ் ஜான் சுந்தர்லால் சுரேஷ், 20-க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். குற்றம் நடந்த பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டுள்ள அவர், நாளை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். நாளை மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.