News March 20, 2025

அசிங்கமாக பேசிய Grok.. களமிறங்கிய IT அமைச்சகம்

image

X AI சாட்போட்டான Grok, பயனர்களின் கேள்விக்கு, ஆபாசமாக பதிலளித்தது குறித்து மத்திய IT அமைச்சகம் விசாரித்து வருகிறது. ஏன் இவ்வாறு நடந்தது என X நிறுவன ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு Grok நீண்ட நேரம் பதிலளிக்காமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், ஹிந்தியில் கொச்சையாக மீண்டும் கேள்வி எழுப்பியதால், அதுவும் கொச்சையாக பதிலளித்தது.

Similar News

News March 20, 2025

சில்க் ஸ்மிதா கொலையா? – சகோதரர் பகீர் குற்றச்சாட்டு

image

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா இறந்து சுமார் 30 ஆண்டுகளாகியும் அவரது மரணத்தில் இருக்கும் மர்மத்திற்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. இந்நிலையில், சில்க்கை அவரது உதவியாளர் ராதாகிருஷ்ணன் கொலை செய்துவிட்டு சொத்துகளை அபகரித்து விட்டதாக சில்கின் சகோதரர் நாக வரபிரசாத் குற்றஞ்சாட்டியுள்ளார். ராதாகிருஷ்ணன் எங்கே இருக்கிறார் என அறிந்தால் வழக்குத் தொடுப்பேன் என்றும் சில்கின் சகோதரர் கூறியுள்ளார்.

News March 20, 2025

மீண்டும் தாக்கிய இஸ்ரேல்: காசாவில் மரண ஓலம்

image

காசா மக்களின் வாழ்க்கை மீண்டும் கண்ணீர்க் கடலில் தத்தளிக்கத் தொடங்கியுள்ளது. பணயக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இன்று நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 20, 2025

குருபெயர்ச்சி: கோடியில் புரளப்போகும் 3 ராசிகள்!

image

குருபகவான் வரும் மே 14ஆம் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்கு செல்கிறார். குருவின் இந்தப் பெயர்ச்சியால் 3 ராசிகள் கோடிகளில் புரளப் போகின்றனர். 1) ரிஷபம்: தொழில் சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல வழிகளில் பணம் வரும். 2) சிம்மம்: திருமண யோகம் உண்டு. திடீர் பண வரவால் வாழ்க்கை மாறும். 3) தனுசு: வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும். இல்லறத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

error: Content is protected !!