News April 10, 2025

Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு கடிதம் 

image

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை போலீசார் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான டேட்டிங் ஆப் Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகும் 10ல், 5 பேர் இந்த செயலியை பயன்படுத்துவது உறுதியாகியுள்ளதாக அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 29, 2025

சென்னையில் இன்று 116 சிறப்பு மருத்துவ முகாம்கள்

image

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு இன்று (அக் 29) மண்டல வாரியாக திருவொற்றியூர்-3, மணலி-3, மாதாவரம்-3, தண்டையார்பேட்டை-4, இராயபுரம் – 3, திரு.வி.க. நகர் – 9, அம்பத்தூர் – 10, அண்ணாநகர் – 21, தேனாம்பேட்டை – 3, கோடம்பாக்கம் – 9, வளசரவாக்கம் – 3, ஆலந்தூர் – 12, அடையார் – 13, பெருங்குடி – 11, சோழிங்கநல்லூர் – 9 முகாம்கள் என 116 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News October 29, 2025

சென்னை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 29, 2025

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆ.ராசா

image

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ஆஸ்திரேலியா நாட்டின் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் (PATCA) அமைப்பின் சார்பில், அடுத்த வாரம் நடைபெறவுள்ள மாநாட்டில் மனிதநேயம் மற்றும் சமூக ஒற்றுமை தலைப்பில் உரையாற்றவுள்ளார். இதனையடுத்து இன்று திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான முக.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

error: Content is protected !!