News April 18, 2025
விண்வெளி துறைக்கு க்ரீன் சிக்னல்.. TN அரசு சாதிக்குமா?

‘தமிழ்நாடு விண்வெளி கொள்கை 2025’ திட்டத்திற்கு CM ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி அளவிலான முதலீடுகளை ஈர்க்க உள்ளதாகவும், தமிழ்நாட்டில் விண்வெளித் துறைக்கு தகுதியான பட்டதாரிகளையும், ஊழியர்களையும் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
நீட் மரணம்: மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக அஞ்சலி

நீட் தேர்வு ரத்து என்ற திமுகவின் பொய் வாக்குறுதியால் உயிரிழந்த 22 மாணவர்களுக்கு, இன்று அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மாலை 6 மணிக்கு அதிமுக மாணவர் அணியினர் அஞ்சலி செலுத்த உள்ளனர். பொய் வாக்குறுதி அளித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வாக்குகளைப் பெற்று திமுக வெற்றி பெற்றதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
News April 19, 2025
10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவு.. கல்வித்துறை முக்கிய தகவல்

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகளும் முடிவடைந்துள்ளது. 10-ம் வகுப்புக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் வரும் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில், திட்டமிட்டபடி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 9-ம் தேதியும், 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதியும் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
News April 19, 2025
குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்த கவர்னர் ஆர்.என்.ரவி!

டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஜெகதீப் தன்கர் விமர்சித்திருந்த நிலையில், ஆர்.என்.ரவி திடீரென சந்தித்து பேசியுள்ளார்.