News May 4, 2024
வாகன ஓட்டிகளுக்கு நிழல் அளிக்கும் பசுமை பந்தல்கள்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால், பகல் நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். அப்படி, வெயிலில் வரும் வாகன ஓட்டிகளுக்கு நிழல் அளிக்கும் வகையில் கோவை, திருப்பூர் மாநகராட்சிகள் சிக்னல்களில் பசுமை பந்தல்களை அமைத்து வருகின்றன. இதற்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பசுமை பந்தல்கள் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News September 22, 2025
பாகிஸ்தான் எங்களுக்கு போட்டியே இல்லை..!

பாகிஸ்தான் அணி தங்களுக்கு போட்டியே இல்லை என்ற தொனியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசியுள்ளார். ‘என்னை பொறுத்தவரை, 2 அணிகளுக்கும் இடையே 7-7 (அ) 7-8 என்ற நிலையில் வெற்றி நிலவரம் இருந்தால் சம போட்டியாளர்கள் (RIVALRY), 13-0, 10-1 என இருந்தால் அது போட்டி அல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஆசிய கோப்பையில் IND vs PAK 21 முறை மோதியுள்ளன. IND 12, PAK 6 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளுக்கு முடிவில்லை.
News September 22, 2025
சூரிய கிரகணத்தை பாருங்க.. EXCLUSIVE PHOTOS

இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்துள்ளது. அதாவது, நேற்றிரவு 10.59 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 3.23 வரை நீடித்தது. இதனை இந்தியாவில் பார்க்க முடியாது என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் சூரிய கிரகணத்தை பார்த்தவர்கள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து அதனை காணுங்கள்!
News September 22, 2025
Health Tips: மாதவிடாய் பிரச்னையா? இதோ தீர்வு

மாதவிடாய் பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு உள்ளது. இதில் முக்கியமான பிரச்னை மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதுதான். இதற்கு எளிய மருத்துவம் உள்ளது. 2 ஸ்பூன் கறிவேப்பிலை சாறு, அருகம்புல் சாறு தினமும் 3 வேளை சாப்பிட வேண்டும். 30 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர அதிக ரத்தப்போக்கு பிரச்னை சரியாகும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். நீங்கள் அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு SHARE பண்ணுங்க.