News October 8, 2025

ஒரே குடும்பத்தில் பெரும் சோகம்

image

கர்நாடகாவில் விடுமுறையை கழிக்க டேம் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 6 பேர் நீரில் அடித்து செல்லப்பட்ட சோகம் நிகழ்ந்துள்ளது. துமகுரு டேமுக்குச் சென்ற 15 பேரில், 7 பேர் நீரில் இறங்கியுள்ளனர். அப்போது, திடீரென நீர் வரத்து அதிகரிக்கவே 7 பேரும் அடித்து செல்லப்பட்டனர். அதில் ஒருவர் மீட்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News October 8, 2025

N.ஆனந்த் பதுங்கியிருக்கும் இடம் இதுவா? Official தகவல்

image

கரூர் துயரத்தை அடுத்து தவெக பொதுச்செயலாளர் N.ஆனந்தையும், நிர்மல் குமாரையும் தேடிவருகிறது போலீஸ். இவர்கள் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விளக்கமளித்துள்ளார். புதுச்சேரியில் ஆனந்த் பதுங்கியிருக்கிறாரா என்பது பற்றி எதுவும் தெரியாது எனவும், இதுகுறித்து TN போலீஸ் தங்களை அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News October 8, 2025

பிரபல பாடகர் மரணம்.. கண்ணீர் அஞ்சலி

image

பஞ்சாபி பாடகரும் நடிகருமான ராஜ்வீர் ஜவாண்டா உயிரிழந்தார். சிம்லாவின் சோலன் என்ற பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது இவர் சாலை விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்து 11 நாள்களாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலரும் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News October 8, 2025

கரூர் செல்ல அனுமதி கேட்டார் விஜய்

image

கரூர் செல்ல விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் தவெக தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்திக்க விஜய் தரப்பு பாதுகாப்பு கேட்ட நிலையில், கரூர் போலீஸ் எந்த பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், டிஜிபி அலுவலகத்தில் நேரடியாக மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அனுமதி அளித்த உடனே விஜய் கரூர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!