News August 10, 2024
மகா நிலநடுக்கம்: எச்சரிக்கை விடுத்த ஜப்பான் விஞ்ஞானிகள்

ஜப்பானின் தெற்குக் கடலோரப் பகுதியில், ‘மகா நிலநடுக்கம்’ ஏற்படும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் முதல்முறையாக எச்சரித்துள்ளது. கியூஷூ தீவில் ஆக., 8ஆம் தேதியன்று 7.1 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அழுத்தம் ஜப்பானின் பசிபிக் கடல் முழுவதும் பரந்துள்ளது. இது குறித்து ஆய்ந்த விஞ்ஞானிகள் ஒரு வாரத்துக்குள் மகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்
Similar News
News November 26, 2025
சீனா விவகாரத்தில் மோடி பேசுவாரா? தமிமுன் அன்சாரி

அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது எனக்கூறி, இந்திய பெண் அலைக்கழிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது நம் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும். அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரும் சீனாவுக்கு, நமது பதில் என்ன, இதுகுறித்து PM மோடி பேசுவாரா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாய் திறப்பாரா என கேள்வி எழுப்பினார்.
News November 26, 2025
விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. அதனைதொடர்ந்து டிச.1-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நாகைக்கு தொடர்ந்து மூன்று நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும்.
News November 26, 2025
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. அதன்படி, அரியலூர், கோவை, கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, தி.மலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்


