News June 17, 2024
பேரனைக் கொன்ற தாத்தா கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜோதிடத்தை நம்பி, பிஞ்சுக் குழந்தையைக் கொன்ற தாத்தா வீரமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடர் கூறியிருக்கிறார். அதனை நம்பி, பிறந்து 38 நாள்கள் மட்டுமே ஆன பேரனை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொலை செய்திருக்கிறார் தாத்தா வீரமுத்து.
Similar News
News November 14, 2025
IND vs SA: முதல் டெஸ்ட் இன்று.. கில் படை வெல்லுமா?

IND vs SA இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. கடந்த முறை நியூஸி., அணி, ஸ்பின்னர்களை வைத்து IND அணியை ஒயிட்வாஷ் செய்தது. அதேபோல, SA-வும் 3 ஸ்பின்னர்களை ஆயுதமாக கூர்திட்டி வருகிறது. எனவே, இந்த தொடர் IND அணிக்கு சவாலாகவே இருக்கும். இரு அணிகளும் இதுவரை 44 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் SA 18, IND 16 போட்டிகளிலும் வென்றுள்ளன. மீதமுள்ள போட்டிகள் டிராவில் முடிந்தன.
News November 14, 2025
பள்ளி மாணவர்களுக்கு META AI தலைவரின் அட்வைஸ்

13 வயது உள்ள மாணவர்கள், இப்போதிருந்தே AI டூல்ஸ்களை கற்றுக்கொள்ள வேண்டும் என META AI தலைவர் அலெக்சாண்டர் வாங் அறிவுறுத்தியுள்ளார். இதுதான் சரியான நேரம் எனவும், AI டூல்ஸ்களில் நிபுணத்துவம் அடைந்தால், வருங்காலத்தின் பொருளாதாரமும், டெக்னாலஜியும் உங்களுடையதே என்றும் வாங் கூறியுள்ளார். பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் தங்கள் இளமை காலத்தில் இதையே செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 14, 2025
பிஹாரில் இன்று வாக்கு எண்ணிக்கை.. வெல்வது யார்?

பிஹார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் NDA கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டிருந்தாலும், தாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம் என எதிர்க்கட்சிகளும் கூறிவருகின்றன. அதனால் இன்று பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இது தவிர, தெலங்கானா, ஒடிஷா, ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடந்த 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாக உள்ளன.


