News March 22, 2025

மாநிலம் முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம்!

image

மாநிலம் முழுவதும் நாளை (மார்ச் 23) ‘கிராம சபைக் கூட்டம்’ நடத்தத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக தண்ணீர்‌ தினத்தையொட்டி நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், தண்ணீரின் அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு ஆகியவை தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றி ‘நம்ம கிராம சபை’ செயலியில் பதிவிட உத்தரவிட்டுள்ளது.

Similar News

News March 23, 2025

தந்தை பெரியார் பொன்மொழிகள்

image

*ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். *முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள். *முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது. அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும். *ஓய்வும், சலிப்பும் தற்கொலைக்கு சமமானது. *கல்வி, சுயமரியாதை, பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

News March 23, 2025

கலவரக்காரர்களிடம் இருந்தே காசு வசூல்

image

நாக்பூர் கலவரக்காரர்களிடம் இருந்தே, பொதுச் சொத்துக்கள் சேதமடைந்ததற்கான காசு வசூல் செய்யப்படும் என மகாராஷ்டிரா CM பட்னவிஸ் தெரிவித்துள்ளார். பணம் கொடுக்காத பட்சத்தில், அவர்களின் சொத்துக்கள் விற்கப்படும் எனவும், வீடுகளை இடிக்க புல்டோசர்கள் கூட பயன்படுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை இடிக்க இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது கலவரம் வெடித்தது.

News March 23, 2025

மார்ச் 23: வரலாற்றில் இன்று!

image

*1931 –காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக பகத் சிங் தூக்கிலிடப்பட்டார். *1940 – அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கை வெளியிடப்பட்டது. *1942 – இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர். *1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது. *உலக வானிலை நாள்

error: Content is protected !!