News December 9, 2024
மணிப்பூரில் கட்டுப்பாடுகளை தளர்த்திய அரசு

மணிப்பூரில் 3 வாரங்களுக்கு பிறகு இணையச்சேவை இயல்புக்கு திரும்பியுள்ளது. சுராசந்த்பூர், தெளபல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகரித்த வன்முறையால் நவ.16 அன்று இணையச்சேவை முடக்கப்பட்டது. 2-வது ஆண்டாக மணிப்பூரில் தொடரும் வன்முறையில் இதுவரை 200-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான சொத்துகள் சேதமடைந்துள்ளன. இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு SC உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 3, 2026
‘போர் பதற்றம்’ தமிழர்களுக்கு பாதிப்பில்லை: TN அரசு

போர் காரணமாக வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தமிழர்கள் பற்றி அவர்களது உறவினர்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், போரினால் தமிழர்களுக்கு பாதிப்பில்லை என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு மையத்திடம் உதவிகேட்ட 974 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், விமான சேவை தொடங்கியவுடன் அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் TN அரசு குறிப்பிட்டுள்ளது.
News March 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 626 ▶குறள்:
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
▶பொருள்: இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.
News March 3, 2026
ஈரான் அமைதியாக இருக்காது: மசூத் பெசஷ்கியான் எச்சரிக்கை

ஈரான் மீது USA, இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் மனிதகுலத்திற்கு எதிரானது என அந்நாட்டு அதிபர் பெசஷ்கியான் கூறியுள்ளார். பள்ளி குழந்தைகள், ஹாஸ்பிடல் நோயாளிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும், இது மிகவும் கொடூரமான செயல் என வருந்தியுள்ளார். இதற்கு உலக நாடுகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், ஈரான் சரணடையாது; அமைதி காக்காது என்றும் எச்சரித்துள்ளார்.


