News November 16, 2024
ஆளுநர் மாளிகை அழைப்பிதழ் – மீண்டும் காவியில் திருவள்ளுவர்

தமிழக அரசுக்கும் – ஆளுநருக்கும் இடையே சித்தாந்த ரீதியிலான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இந்நிலையில், ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கவிஞர்கள் கபீர் தாஸ், யோகி வேமனா குறித்த சர்வதேச கருத்தரங்கிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தமிழ் அமைப்புகள் இதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன.
Similar News
News March 18, 2026
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை.. வந்தது அறிவிப்பு

நாளை (மார்ச் 19) தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பின், 20-ம் தேதி வேலை நாளாக இருக்கும். அதன்பின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 21-ம் தேதியும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை வருகிறது. அதாவது அடுத்த 4 நாள்களில் 3 நாள்கள் விடுமுறையாகும்.
News March 18, 2026
இபிஎஸ்சை சந்திக்கிறார் நயினார்

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று மாலை EPS-ஐ நயினார், எல்.முருகன் சந்தித்து ஆலோசிக்கவுள்ளனர். அப்போது, பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்தும், TTV, ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
News March 18, 2026
என் வீட்டின் மேல் ஏவுகணைகள் பறந்தன: சானியா மிர்சா

ரம்ஜான் பண்டிகைக்காக துபாயிலிருந்து தனது மகனுடன் ஹைதராபாத் திரும்பிய சானியா மிர்சா போர் சூழல் குறித்த தனது அனுபவங்களை அதிர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தங்கள் வீட்டிற்கு மேல் ஏவுகணைகள் இடைமறிக்கப்படுவதை கண்டதாக அவர் கூறினார். அப்படிப்பட்ட சூழலை தங்கள் குழந்தைகள் அனுபவிப்பதை யாருமே விரும்பமாட்டார்கள்; அமைதியற்றதாக உணர்ந்ததால் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.


