News August 2, 2024
டெல்லியில் இன்று ஆளுநர்கள் மாநாடு

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் ஆளுநர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதில் குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், உயர் கல்வியில் சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. இம்மாநாட்டில், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News February 21, 2026
கடற்படையில் இணையும் INS அரிந்தாமன்

இந்தியாவின் 3-வது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான INS அரிந்தாமன் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கடற்படையில் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் எடை சுமார் 7,000 டன் ஆகும். 3,500 கிமீ தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட K-4 அணு ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் Make in India திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
News February 21, 2026
இலவச நாப்கின் வழங்கும் அரசு திட்டம்

மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 – 19 வயது மாணவிகளுக்கு விலையில்லா நாப்கின்களை TN அரசு வழங்குகிறது. மாணவிகளுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை, 3 பாக்கெட்டுகள்(தலா 6 நாப்கின்கள்) கிடைக்கும். சில பள்ளிகளில் நாப்கின் மெஷின்களும் வைக்கப்பட்டுள்ளன. உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியில் நாப்கின் கிடைக்காத பட்சத்தில், 104, 1100, 181-ல் புகாரளியுங்கள். SHARE.
News February 21, 2026
12 தொகுதிகளை கேட்கும் தேமுதிக!

திமுக தலைமையிடம் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியலை தேமுதிக வழங்கியுள்ளது. ரிஷிவந்தியம், விருதுநகர், கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட 12 தொகுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக 6 சட்டமன்ற தொகுதிகளும், 1 ராஜ்யசபா சீட்டும் வழங்க திமுக தயாராக இருப்பதாக பேசப்பட்டது. தற்போது இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை தேமுதிக கேட்பது, திமுக தலைமைக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாம்.


