News August 2, 2024
டெல்லியில் இன்று ஆளுநர்கள் மாநாடு

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் ஆளுநர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதில் குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், உயர் கல்வியில் சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. இம்மாநாட்டில், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News January 29, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் வரும் பிப். 1ஆம் தேதி மூட வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்த தவறும்பட்சத்தில் தொடர்புடைய மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளர்.
News January 29, 2026
‘அரசுக்கல்லூரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை’

அண்ணா பல்கலை., கொடூரம் போல, சென்னை நந்தனம் அரசுக் கலைக்கல்லூரியில் மற்றொரு மிருகத்தனமான சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி கேண்டீனில் பணிபுரியும் பெண்ணுக்கு, சமையல் மாஸ்டரான குணசேகர் மற்றும் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே காவலாளியிடம் அப்பெண் கூறியிருக்கிறார். இதுகுறித்த புகாரின் பேரில், குணசேகரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
News January 29, 2026
காங்., அடுக்கிய டிமாண்ட்.. இவ்வளவும் வேண்டுமா?

கனிமொழி – ராகுல் சந்திப்பில் காங்., பல டிமாண்ட்களை அடுக்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, 39 தொகுதிகள், து.சபாநாயகர் பதவி, 2 ராஜ்யசபா சீட், 5 வாரிய தலைவர்கள் பதவி, உள்ளாட்சி தேர்தலில் 20 சீட் வேண்டும் என காங்., கோரிக்கை வைத்துள்ளதாம். அத்துடன், ஒருவேளை தேர்தலுக்கு பிறகு திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் ‘ஆட்சியில் பங்கு’ தரவேண்டும் எனவும் காங்கிரஸ் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.


