News August 2, 2024
டெல்லியில் இன்று ஆளுநர்கள் மாநாடு

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் ஆளுநர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதில் குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், உயர் கல்வியில் சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. இம்மாநாட்டில், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News February 14, 2026
பண மழையில் நனையும் 4 ராசிகள்

சுக்கிரனும், சூரிய பகவானும் நேற்று(பிப்.13) இணைந்திருப்பதால், 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, *மேஷம்: வருமானம் இரட்டிப்பாகி நிதி நிலைமை மேம்படும். *மிதுனம்: எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைத்து வீடு, வாகனம், நகை வாங்கும் யோகம் உண்டாகும். *கன்னி: திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். *தனுசு: சேமிப்பு உயரும். பல வழிகளில் லாபம் பெருகும்.
News February 14, 2026
வீட்டிலிருந்தே சிவராத்திரி வழிபாடு.. எப்படி?

மகா சிவராத்திரி அன்று கோயிலுக்கு செல்ல முடியாவிட்டாலும், வீட்டிலிருந்தே சிவனை வழிபடலாம். இரவு சிவனை மனதில் நினைத்து, சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்யவும். இந்த நேரத்தில் பூமியை நோக்கி பாயும் கதிர் வீச்சானது நமது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால், வீட்டிலிருந்தே சிவராத்திரி நன்மையை பெற முடியும்.
News February 14, 2026
நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. ஹேப்பி நியூஸ்

மகளிர் வங்கிக் கணக்கில் ₹5,000 டெபாசிட் செய்து TN அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில், நகைக் கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் வாக்குறுதிக்காக மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையுள்ள நகைக் கடன் விவரங்களை TN அரசு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நகைக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


