News August 2, 2024
டெல்லியில் இன்று ஆளுநர்கள் மாநாடு

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் ஆளுநர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதில் குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், உயர் கல்வியில் சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. இம்மாநாட்டில், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News February 18, 2026
ஒரே தேர்தலில் 4 விஜயகாந்த் போட்டி.. REWIND

2006 பேரவை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் மறைந்த விஜயகாந்த் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். இதில் இவரைத் தவிர, கே, ச, எ ஆகிய இன்ஷில்களைக் கொண்ட 3 விஜயகாந்த் பெயர் கொண்டவர்கள் போட்டியிட்டிருந்தனர். அதேபோல், 2024 லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அப்போது, இதே ‘O’ இன்ஷியலில் 4 பன்னீர்செல்வமும், ‘M’ இன்ஷியலில் 1 பன்னீர்செல்வமும் போட்டியிட்டனர்.
News February 18, 2026
தவெகவுக்கு ‘நோ’.. செங்கோட்டையன் ஏமாற்றம்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக EX அமைச்சர் ஒருவரை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர் தனக்கு திமுகவில் இருந்து அழைப்பு வந்துள்ளதாகவும், அங்கு செல்வதே சிறந்ததாக இருக்கும் என்றும் கூறிவிட்டதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செங்கோட்டையன் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளார். ஏற்கெனவே வைத்திலிங்கத்தை தவெகவில் இணைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.
News February 18, 2026
40 நாள்கள் தவக்காலம் இன்று தொடங்கியது

ஈஸ்டர் பெருவிழாவையை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலம், சாம்பல் புதனான இன்று தொடங்கியது. இக்காலத்தில் இறைச்சி, மது சாப்பிடாமல் விரதமிருந்து சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுவர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் விழாவாக கொண்டாடுகின்றனர். அதற்கு முந்தைய 40 நாள்கள் இயேசுவின் தியாகத்தை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகின்றனர்.


