News August 2, 2024
டெல்லியில் இன்று ஆளுநர்கள் மாநாடு

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் ஆளுநர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதில் குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், உயர் கல்வியில் சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. இம்மாநாட்டில், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News February 21, 2026
சுவாசக் கோளாறுகளை குணப்படுத்தும் கசாயம்!

சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடவும், சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெறவும் புதினா கசாயம் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ➤தேவையானவை: புதினா, மிளகுத்தூள், உப்பு ➤செய்முறை: புதினாவை கிள்ளி போட்டு, தண்ணீரில் 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை வடிகட்டி, இறக்கி உப்பு, மிளகு தூள் கலந்தால் புதினா கசாயம் தயார். அனைவருக்கும் இச்செய்தியை பகிரவும்.
News February 21, 2026
மகளிருக்கு ₹2,000.. வீடு தேடி அதிகாரிகள் வருகின்றனர்

மகளிர் உரிமைத்தொகைக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் புதிதாக விண்ணப்பித்து, பின்னர் மேல்முறையீடு செய்தவர்களின் மனுக்களின் பரிசீலனை தொடங்கியுள்ளது. ரேஷன் கார்டு, ஆதார், மின் இணைப்பு எண் மற்றும் அரசின் விதிமுறைக்கு உள்பட்டு அவர்கள் தகுதியானவர்களா என்பதும் ஆராயப்பட்டு வருகின்றன. 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னர் பல லட்சம் பேர் இத்திட்டத்தில் இணைய வாய்ப்புள்ளதாம்.
News February 21, 2026
சத்தான்கள் வேதம் ஓதக் கூடாது: அன்புமணி

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டிவிட்டு சமூகநீதி வேடம் போடுவதாக CM ஸ்டாலினை அன்புமணி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களுக்கான <<19180474>>இட ஒதுக்கீடு<<>> செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அவர், சாத்தான்கள் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது இது என சாடியுள்ளார். TN-ல் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு செய்த துரோகத்தை CM நினைத்து பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


