News August 2, 2024
டெல்லியில் இன்று ஆளுநர்கள் மாநாடு

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் ஆளுநர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதில் குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், உயர் கல்வியில் சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. இம்மாநாட்டில், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News February 19, 2026
அதற்கெல்லாம் அடிப்படை அறிவு வேண்டும்: மா.சு

சென்னை மத்திய கைலாஷின் புதிய மேம்பால கட்டுமானத்தில் எப்படி ஊழல் நடந்தது என வெளிப்படையாக தெரிவித்தால், வசதியாக இருக்கும் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். L வடிவ பாலம் என்றால் அச்சு அசலாக L மாதிரியே கட்ட முடியாது; சாலையின் அமைப்புக்கு ஏற்ற மாதிரி பாலம் கட்டுவார்கள் என்றார். இப்பாலம் W வடிவில் இருப்பதாக <<19180715>>பாஜக, பாமக விமர்சித்த நிலையில், <<>>அதற்கெல்லாம் அடிப்படை அறிவு வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
News February 19, 2026
விஜய் பரப்புரை பிளானில் மாற்றம்.. தவெகவினர் உற்சாகம்

வேலூரில் 5,000 பேர் பங்குபெறும் தவெக கூட்டத்திற்கு முதல்முறையாக பந்தல் அமைக்கப்படவுள்ளது. விஜய்யின் சேலம் சந்திப்பில் ஒருவர் வெயில் காரணமாக மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வேலூரில் வரும் 23-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். இந்நிலையில் அங்கு பந்தல் அமைக்கவும், நாற்காலிகளில் தண்ணீர் வைக்கவும் ஏற்பாடு செய்வதால் தவெகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
News February 19, 2026
துரோகிகளை வேரறுக்க ஒன்றுபடுவோம்: சசிகலா

எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுக்க ஒன்றாக இணைவோம் என தனது ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் 24-ம் தேதி கமுதியில் பொதுக்கூட்டம் ஒன்று சசிகலா தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த அரசியல் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?


