News April 25, 2025
கவர்னர் வழக்கு வெற்றி.. CM ஸ்டாலினுக்கு பாராட்டு விழா

கவர்னர் வழக்கு விவகாரத்தில் வெற்றி பெற்ற முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். மே 3-ல் நேரு உள் விளையாட்டு அரங்கில் விழா நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிறுத்திவைக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்பது உள்பட பல முக்கிய அம்சங்கள் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 25, 2025
தமிழ்நாட்டில் காவல் ராஜ்ஜியம் நடக்கிறதா?… கவர்னர்

துணை வேந்தர்களை மாநாட்டில் பங்கேற்கவிடாமல் தடுத்த விதம் எமர்ஜென்சியை நினைவூட்டுவதாக கவர்னர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். காவல்துறையை பயன்படுத்தி VC-க்களை CM தடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஊட்டி சென்ற VC-க்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? VC-க்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 25, 2025
போப் ஆண்டவர் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், வாடிகனில் நாளை போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்குகள் நடக்கும் நிலையில், நாளைய தினம் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
News April 25, 2025
முதல் பந்திலேயே CSK-க்கு அதிர்ச்சி கொடுத்த ஷமி

சென்னை Chepauk மைதானத்தில் நடைபெற்று வரும் CSK vs SRH இடையிலான போட்டி, இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டியாகும். முதலில் பேட்டிங் செய்துவரும் CSK அணி, முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது. ஷமி வீசிய முதல் பந்திலேயே ர ரஷீத் அபிஷேக்கிடம் கேட்ச் கொடுத்து, வந்த வேகத்தில் நடையை கட்டினார். தற்போது ஒரு ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.