News March 21, 2024
ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும்

உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு ஆளாகியுள்ள ஆளுநர் ரவிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவி, உடனடியாக பதவி விலக வேண்டும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். பொன்முடி வழக்கில், நீதிமன்றம் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்ததையடுத்து, பொன்முடிக்கு இன்று அல்லது நாளை பதவிப்பிரமாணம் செய்துவைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
Similar News
News April 27, 2025
170 சீட் உறுதி.. வியூகம் வகுக்கும் இபிஎஸ்!

2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் இபிஎஸ் தெளிவாக உள்ளார். எனவே, 170-க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும் என அவர் நினைக்கிறார். அதனால் தான், ADMK 150, BJP 40, பிற கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் என்ற பாஜகவின் கணக்கிற்கு அவர் உடன்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த முறை ஆட்சியை பிடிப்பதில் அவர் உறுதியாக உள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
News April 27, 2025
இந்தியாவிற்கு எதிராக போர் அறிவிப்பு

பாக். ஆதரவில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் எனும் தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராக போரை அறிவித்துள்ளது. ஜம்மு & காஷ்மீரில் ஆயுதப்போராட்டத்தை தொடங்க தயாராக இருப்பதாகவும், தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அல்லாவின் ஆதரவில் இது நிகழ்த்தி காட்டப்படும் எனவும், காஷ்மீர் ஜிகாத் போராட்டம் நடக்கும் என்றும் கூறியுள்ளது.
News April 27, 2025
வெயில் கொளுத்தும்.. வெளியே வராதீங்க..

கோடை வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இயல்பை விட இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்