News April 7, 2024

என்.ஐ.ஏ அதிகாரிகள் மீதான தாக்குதலுக்கு ஆளுநர் கண்டனம்

image

மே.வங்கத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் தீவிரமான பிரச்சனை என அம்மாநில ஆளுநர் அனந்த போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு வெடிகுண்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்ற காரின் கண்ணாடியை சிலர் உடைத்து தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்துள்ள ஆளுநர், ‘சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என்றார்.

Similar News

News November 11, 2025

நடிகர் அஜித் வீட்டில் குவிந்த போலீஸ்.. பதற்றம் உருவானது

image

சென்னை ECR-ல் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், நடிகர் SV சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

News November 11, 2025

டெல்லி ஆபத்தை முன்பே கணித்த பள்ளி மாணவன்

image

பள்ளியை முடித்துவிட்டு செங்கோட்டை மெட்ரோ வழியாக வந்த 12-ம் வகுப்பு மாணவன், அப்பகுதியில் வழக்கத்துக்கு மாறாக அதிகமான போலீஸ், ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதை கண்டதாக கூறியிருக்கிறார். Reddit தளத்தில் இவர் இதைபற்றி பதிவிட்ட 3 மணி நேரத்தில் அப்பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், சிறுவனின் Reddit பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது

News November 11, 2025

பிணையம் இல்லாமல் ₹10 லட்சம் லோன் கிடைக்கும்

image

எந்த பிணையமும் இல்லாமல் பெண்களுக்கு ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது மகிளா உத்யம் நிதி யோஜனா திட்டம். இத்திட்டத்தில் கடன் பெற விரும்பும் பெண்கள் குறைந்தது ₹5 லட்சத்தை தொழிலில் முதலீடு செய்யவேண்டும். கடனை திருப்பி அடைக்க 15 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. உங்களது வங்கியின் இணையதளத்தின் வாயிலாக இதற்கு நீங்கள் அப்ளை செய்யலாம். புதிய தொழில் தொடங்கும் ஐடியாவில் இருக்கும் பெண்களுக்கு SHARE THIS.

error: Content is protected !!