News October 19, 2024

ஆளுநரையும், மக்களையும் பிரிக்க முடியாது: தமிழக பாஜக

image

ஆளுநரையும், மக்களையும் திராவிட மாடல் பாேலி அரசியல்வாதிகளால் பிரிக்க முடியாது என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் மகிழ்ச்சி, தமிழகத்தின் வளர்ச்சியில் ஆளுநர் மிகுந்த அக்கறை கொண்டவர் எனக் கூறியுள்ளார். ஆளுநரை திமுக கூட்டணி கட்சிகள் அவதூறு பேசலாம். ஆனால் அதற்கு மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News August 9, 2025

5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று 35-45 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 9, 2025

பொதுக்குழு விவகாரம்.. ராமதாஸ் மேல்முறையீடு

image

அன்புமணி பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராமதாஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆக.17-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக ராமதாஸ் அறிவித்து இருந்தார். உடனே, அவருக்கு முன்பே வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக அன்புமணி அறிவித்த நிலையில், அதற்கு தடைகேட்டு ராமதாஸ் கோர்ட்டுக்கு சென்றார்.

News August 9, 2025

வறுமை இல்லாத மாநிலம் தமிழகம்: CM ஸ்டாலின்

image

வறுமை இல்லாத மாநிலமாக தமிழகம் இருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு விழாவில் பேசிய அவர், அயோத்தியின் பெருமையை சொல்லும் போது கூட, காவிரி நாட்டுடன் கம்பர் ஒப்பிட்டதாகவும், கம்பர் கண்ட கனவு படி தமிழகம் பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இத்தகைய மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதும் அவருக்கு ஆற்றும் தொண்டு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!