News September 4, 2025

நக்சல் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது: அமித்ஷா

image

இந்தியாவில் நக்சல்களை ஒழிக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமித்ஷா, 2026, மார்ச் 31-க்குள் நக்சல் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என சூளுரைத்தார். மேலும் நக்சல் பயங்கரவாதிகள் சரணடையும் வரை (அ) கைதாகும் வரை (அ) ஒழிக்கப்படும் வரை PM மோடி தலைமையிலான அரசு ஓயாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

Similar News

News December 12, 2025

23 நாள்கள் விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

image

2026-ம் ஆண்டுக்கான ரேஷன் கடை விடுமுறை நாள்களின் பட்டியலை அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஜன.1 (ஆங்கில புத்தாண்டு), ஜன.15, 16, 17 (பொங்கல் விடுமுறை), ஜன.26 (குடியரசு தினம்), பிப்.1 (தைப்பூசம்), மார்ச் 21 (ரம்ஜான்), ஏப்.14 (தமிழ் புத்தாண்டு), மே 1 (தொழிலாளர் தினம்), ஜூன் 26 (மொஹரம் பண்டிகை), ஆக.15 (சுதந்திர தினம்), செப்.14 (விநாயகர் சதுர்த்தி) உள்ளிட்ட 23 நாள்கள் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2025

CM விமானப் பயணத்துக்கு மட்டும் ₹47 கோடி செலவு

image

கடந்த 2 ஆண்டுகளில் விமானப் பயணங்களுக்கு மட்டும், ₹47 கோடியை கர்நாடக CM சித்தராமையா செலவு செய்துள்ளது அரசு ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சோசலிச தலைவர் என சொல்லிக்கொண்டு அரசு பணத்தை சித்தராமையா விரையம் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளது. முன்னதாக மோடியின் விமான பயணங்களை காங்., கடுமையாக சாடி வந்த நிலையில், இப்போது சித்தராமையாவை BJP வறுத்தெடுத்து வருகிறது.

News December 12, 2025

தனி நபர் தீபமேற்ற முடியாது: அரசு தரப்பு வாதம்

image

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, மதுரை HC அமர்வில் தொடங்கியது. இதில் உச்சி பிள்ளையார் கோயில் தவிர, தனிநபராக வேறு எந்த இடத்திலும் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத நல்லிணக்கம், பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!