News March 6, 2025

பாலியல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம்

image

பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 43,000 பேரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அத்துடன், இணையத்தில் ஆபாச படங்கள் பார்த்த மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்த 13,000 பேருக்கு சைபர் பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News March 6, 2025

பயத்தில் தடுமாறிவிட்டார் CM: அண்ணாமலை சாடல்

image

தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்த முயன்ற தமிழிசை உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்ததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் பெருமளவில் ஆதரவளிப்பதைக் கண்டு, CM ஸ்டாலின் பயத்தில் தடுமாறியதாகச் சாடிய அவர், இந்த கைது பூச்சாண்டிக்கெல்லாம் பயந்து பின் வாங்கப்போவதில்லை என்றார். வீடு வீடாக செல்வோம், எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாக கைது செய்ய முடியும் என்று வினவியுள்ளார்.

News March 6, 2025

பெண்களுக்கு மாதம் ரூ.2,500.. டெல்லி அரசு வரையறை

image

டெல்லி தேர்தலின்போது பாஜக தரப்பில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தலில் வென்று ஆட்சியமைத்த பாஜக, அத்திட்டத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வருமானம் ஈட்டும் பெண்கள், IT வரி கட்டாதோருக்கு ரூ.2,500 வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News March 6, 2025

₹1,200 முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம்

image

மாநிலத்தில் முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மாதந்தோறும் 10ம் தேதிக்குள் முதியோர் உதவித்தொகை ₹1,200 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், தற்போது மாதக் கடைசி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கு பலமுறை அலைந்து பணம் பெற வேண்டியிருப்பதால், 10ம் தேதிக்குள் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு முதியோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!