News September 10, 2025
பலிகடாவாகும் அரசுப் பள்ளிகள்: அண்ணாமலை

திருச்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து, அங்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்தப்பட்டதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப் பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவதாக கூறி வன்மையாக கண்டித்துள்ளார். மேலும், பள்ளிக்கு விடுமுறை அளித்து, திமுகவின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News March 3, 2026
S-400 சுதர்சன் சக்ரா.. இந்தியாவின் மாஸ்டர் பிளான்

ரஷ்யாவிடம் இருந்து மேலும் 5 சுதர்சன சக்ரா வான் பாதுகாப்பு கவச வாகனங்களை (S-400) வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், கூடுதலாக சில ஏவுகணைகளையும் வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை ஆப்ரேஷன் சிந்தூரின் போது திறம்பட செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, ஒப்பந்தத்தின்படி ரஷ்யா இன்னும் இரண்டு S-400 வாகனங்களை வழங்க வேண்டும்.
News March 3, 2026
போரின் கோரமுகம் (PHOTOS)

USA, இஸ்ரேல் – ஈரான் போரால் கடந்த 4 நாள்களிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குண்டு நம் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் பிள்ளைகளுடன் பெற்றோர் தவிக்கும் போட்டோக்கள் நெஞ்சை உலுக்குகின்றன. என்ன நடக்கிறது என்று புரியாமல் குழந்தைகள் தங்களது பெற்றோரின் மீது சாய்ந்து விடிவை தேடி காத்திருக்கின்றனர். போரினால் அப்பாவி மக்கள் அல்லாடும் போட்டோக்களை பகிர்ந்துள்ளோம். SWIPE செய்து பாருங்கள்.
News March 3, 2026
+2 மாணவர்களே இதை தெரிஞ்சுக்குங்க!

நேற்று தமிழகம் முழுவதும் +2 பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்வு தொடர்பான புகார்களை மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வுத் துறையின் கவனத்திற்கு கொண்டு வர சென்னையில் ‘தேர்வு கட்டுப்பாட்டு அறை’ அமைக்கப்பட்டுள்ளது. இது காலை 8 மணி – இரவு 8 மணி செயல்படும். 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. SHARE IT..


