News April 10, 2025
அரசு பள்ளி மாணவி தற்கொலை

சென்னையை அடுத்த குன்றத்தூரில் தேர்வு பயத்தில் திவ்யதர்ஷினி என்ற அரசு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை 10ஆம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்வு எழுதவிருந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது என்பதை ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். தைரியமாக தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் என கல்வியாளர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
Similar News
News April 18, 2025
ஆன்மிக சுற்றுலாவுக்கு ₹1 லட்சம் மானியம்!

இமயமலை மானசரோவர் யாத்திரை செல்லும் 500 பக்தர்களுக்கு அரசு வழங்கும் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்டு வந்த ₹50,000 மானியம் இனி ₹1 லட்சமாக உயர்த்தப்படும் என பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதே போல், நேபாளம், முக்திநாத் ஆன்மிக பயணத்திற்கான அரசு மானியம் ₹20,000–த்தில் இருந்து ₹30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
News April 18, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹200 உயர்ந்து ₹71,560-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப்.18) சவரனுக்கு ₹200 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் ஒரு கிராம் ₹8,945-க்கும், சவரன் ₹71,560-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹110-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,10,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் நகைப் பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
News April 18, 2025
War தந்த வலி.. இந்த ஆண்டின் பெஸ்ட் போட்டோ இதுதான்!

இந்த போட்டோ உங்களை உலுக்காமல் இருக்காது. இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த காசா சிறுவனின் போட்டோ தான் World Press Photo of the Year 2025 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனிய புகைப்படக் கலைஞர் சமர் அபு எலுஃப் எடுத்த போட்டோவில், 2 கைகளையும் இழந்து, முகத்தில் ‘எப்போது இந்த கொடுமை தீருமோ’ என நீங்காத சோகத்துடன் சிறுவன் அமர்ந்திருக்கிறான். உலகின் எதிர்காலத்தை போர்கள் இருட்டில் ஆழ்த்தி விடுகின்றன.