News January 23, 2025
இன்று முதல் அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா

தமிழகத்தில் 2,238 அரசுப் பள்ளிகள் நூறாண்டுகளைத் தாண்டியும் கல்வியறிவை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதனை கொண்டாடும் விதமாக, இப்பள்ளிகளில் நூற்றாண்டு விழா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இன்று முதல், கொண்டாடப்படவிருக்கும் நூற்றாண்டு விழாவில் கல்வியாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படவுள்ளனர்.
Similar News
News December 1, 2025
தவெக வலையில் சிக்கும் அதிமுக சீனியர்கள்?

செங்கோட்டையனை வைத்தே இன்னும் சில அதிமுக சீனியர்களுக்கு தவெக வலைவீசி இருப்பதாக கூறப்படுகிறது. இதில், பொள்ளாச்சி ஜெயராமன், வைத்திலிங்கம்(OPS தரப்பு), வெல்லமண்டி நடராஜன்(OPS தரப்பு) தற்போது சிக்கியிருக்கிறார்களாம். இவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தையில் தவெக ஈடுபட்டுவருவதாக பேசப்படுகிறது. இவர்கள் தவெகவுக்கு சென்றால் அதிமுக ஒருங்கிணைப்புக்கு மேலும் பின்னடைவு வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 1, 2025
சற்றுமுன்: விலை கிடுகிடுவென உயர்வு

டிட்வா புயல் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. மழையால் விளைச்சல் பாதிப்பு காரணமாக ஒரு கிலோ கத்தரிக்காய் ₹140, தக்காளி ₹80, வெங்காயம் ₹75, வெண்டைக்காய் ₹80, ஊட்டி கேரட் ₹60 என விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
News December 1, 2025
பாக்., ட்ரோன் தாக்குதல் அதிகரிப்பு: BSF

ஆபரேஷன் சிந்துாருக்கு பிறகு, பாக்.,-ல் இருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் வீசும் போக்கு அதிகரித்துள்ளதாக BSF தெரிவித்துள்ளது. 2025-ல் எல்லையை கடந்து வந்த ட்ரோன்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பல்வேறு ரக துப்பாக்கிகள், 3,625 தோட்டாக்கள், 10 கிலோ வெடிபொருட்கள், 12 கையெறி குண்டுகளை கைப்பற்றியுள்ளதாக BSF தெரிவித்துள்ளது. 272 பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


