News April 16, 2025
அரசாணை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும்: TN அரசு

தமிழில் மட்டுமே இனி அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும். கற்றாணைக் குறிப்புகள், துறை தலைமை அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கருத்துரைகளும் தமிழிலேயே இருக்க வேண்டும். அதே போல், பொதுமக்களிடம் இருந்து வரும் கடிதங்களுக்கும் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும் எனவும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
Thalaivar 173-ஆல் அப்செட் ஆனாரா லோகேஷ் கனகராஜ்?

‘Thalaivar 173’ படத்துக்கான உத்தேச இயக்குநர் பட்டியலில் தன் பெயர் இல்லை என்பது லோகேஷ் கனகராஜுக்கு தெரிந்துவிட்டது. இதையடுத்து, ரஜினிக்காக எழுதி வைத்திருந்த கதையைதான் கொஞ்சம் பட்டி, டிங்கரிங் செய்து அல்லு அர்ஜுனுக்கு ஏற்றதுபோல அவர் மாற்றியிருக்கிறாராம். இந்த நிலையில் கடந்த வாரம் மும்பையில் அல்லு அர்ஜுனை சந்தித்த லோகி, அவரிடம் கதையை சொல்லி ஒப்புதலும் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
News December 4, 2025
சற்றுமுன்: விஜய் வழக்கில் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் SIR பணிகளில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறி SIR-க்கு எதிராக விஜய்யின் TVK தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, BLO-க்கள் பற்றாக்குறை இருந்தாலோ அல்லது அவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டாலோ, மாநில அரசு கூடுதல் பணியாளர்களை வழங்கவும், அதற்கு ECI ஒத்துழைப்பு தரவும் SC உத்தரவிட்டுள்ளது.
News December 4, 2025
BREAKING: புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்த நிலையில், இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, வேலூர், விழுப்புரம், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


