News February 2, 2025
அரசு உத்தரவுக்கு மதிப்பில்லை

முகூர்த்த தினமான இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என்று அரசு நேற்று அறிவித்திருந்தது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பதிவு அலுவலகங்கள் இன்று செயல்படவில்லை. விடுமுறை நாள்களில் கூட தங்களை பணிக்கு வர சொல்வது சரியல்ல என்று சார் பதிவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால், மக்கள்தான் பாதிப்பு அடைந்துள்ளனர்.
Similar News
News September 4, 2025
Beauty Tips: உங்களை ஒல்லியாக காட்டும் உடைகள்

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு தங்களை ஒல்லியாக காட்டிக்கொள்ள ஆசைப்படுவார்கள். சில சமயங்களில் உங்களுக்கு ஏற்ற உடை கிடைப்பது சிரமமாக இருக்கலாம். ஆனால் உடையில் இந்த சிறு சிறு விஷயங்களை மாற்றினால் நீங்கள் பருமனாகவே இருந்தாலும் உங்களை அது ஒல்லியாக காட்டும். அது என்ன மாதிரியான உடைகள் என்பதை தெரிந்துக்கொள்ள Swipe பண்ணுங்க. SHARE.
News September 4, 2025
திமுக அரசில் ஜல்லிக்கட்டு டோக்கன்களிலும் ஊழல்: EPS

2026-ல் ADMK ஆட்சி அமைந்தவுடன், பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என சேந்தமங்கலம் தேர்தல் பரப்புரையில் EPS தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டி டோக்கன்களிலும் ஊழல் செய்த திமுக அரசு அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு புதிய வடிவில் பெயர் சூட்டி வருவதாக சாடினார். மேலும், டாஸ்மாக்கில் ₹1,000 கோடி ஊழலை ED கண்டுபிடித்துள்ளதாகவும் விரைவில் பலர் கைதாக உள்ளனர் என ஆருடம் தெரிவித்தார்.
News September 4, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கும் ₹5,000.. வெளியான புது தகவல்

2026 பொங்கல் பண்டிகை சிறப்புத் தொகுப்புடன், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5,000 ரொக்கம் வழங்க TN அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது CM ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?