News April 8, 2025
பெண்களுக்கு மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன்: அரசு

பொருளாதாரத்தில் பின்தங்கிய 1,000 மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக ரூ.3 லட்சம் கடன் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மானியக் கோரிக்கை மீது பதில் தாக்கல் செய்துள்ளார். அதில், நிலமற்ற ஏழை பெண் விவசாய தொழிலாளர்கள் 2 ஏக்கர் நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 22, 2026
வங்கி கணக்கில் ₹2,000.. வந்தது ALERT

PM KISAN திட்ட பயனாளிகள் அடுத்த தவணையை (₹2,000) பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. நீங்கள் KYC அப்டேட் செய்திருந்தாலும், வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருந்தாலோ, NPCI மேப்பிங் புதுப்பிக்கப்படாவிட்டாலோ பணம் வராமல் போகலாம். ஹோலி பண்டிகைக்கு முன்பாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால், பணிகளை உடனே முடியுங்கள். SHARE IT.
News February 22, 2026
திமுக மாநில மாநாடு தேதி மாற்றம்

திருச்சியில் நடைபெறவிருந்த திமுக மாநில மாநாடு மார்ச் 8-ம் தேதிக்கு பதில் 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தனது X பக்கத்தில், மார்ச் 9-ல் திருச்சியில் “மெயின் பிக்சர்” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இதனால், அந்த மாநாட்டில் மகளிருக்கான முக்கிய தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News February 22, 2026
FLASH: சரத்பவார் ஹாஸ்பிடலில் அனுமதி

NCP மூத்த தலைவர் சரத்பவார் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்னும் 2 நாள்களுக்கு சிகிச்சையில் இருப்பார் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். டிஸ்சார்ஜ் ஆன பிறகும், அவர் சிறிது காலம் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


