News April 8, 2025
பெண்களுக்கு மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன்: அரசு

பொருளாதாரத்தில் பின்தங்கிய 1,000 மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக ரூ.3 லட்சம் கடன் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மானியக் கோரிக்கை மீது பதில் தாக்கல் செய்துள்ளார். அதில், நிலமற்ற ஏழை பெண் விவசாய தொழிலாளர்கள் 2 ஏக்கர் நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
கண்ணாடி பாட்டில் மூடியில் 21 மடிப்புகள் இருப்பதன் காரணம்!

இங்கு காரண காரியம் இன்றி எதுவும் கிடையாது. கண்ணாடி ஜூஸ் பாட்டில்கள் & பீர் பாட்டில் 21 மடிப்புகள் இருப்பதற்கும் காரணம் உண்டு. சோடாக்களில் அதிக கார்பன் டை ஆக்சைடு இருப்பதால், கண்ணாடி பாட்டில் அந்த அழுத்ததை தாங்க, மூடி இறுகலாக இருக்க வேண்டும். இதனால், பல கட்ட சோதனைக்கு பிறகு, 21 மடிப்புகள் இருந்தால் மட்டுமே மூடி அழுத்தமாக இருக்கும் என கண்டறியப்பட்டு சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
News December 1, 2025
பார்லிமென்ட்டில் டிராமா பண்ண கூடாது: PM மோடி

பார்லிமென்ட் டிராமா செய்யும் இடமல்ல; அது விவாதம் நடத்துவதற்கான இடம் என PM மோடி தெரிவித்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அவைக்குள் அமளி செய்யக்கூடாது; அதனை வெளியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் இளம் MP-க்கள் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் இடமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். உங்கள் கருத்து?
News December 1, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

கிருஷ்ணகிரியில் அதிமுகவில் இருந்து விலகிய 2,000 பேர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கடந்த மாதம் 13-ம் தேதி திமுகவில் இணைந்த அதிமுகவின் Ex ஓசூர் மாநகர கிழக்கு மண்டல குழுத் தலைவர் புருசோத்தமரெட்டி தலைமையில் இந்த இணைப்பு நடைபெற்றுள்ளது. மேலும், கே.பி.முனுசாமியின் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை குறிவைத்து திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


