News April 8, 2025

பெண்களுக்கு மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன்: அரசு

image

பொருளாதாரத்தில் பின்தங்கிய 1,000 மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக ரூ.3 லட்சம் கடன் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மானியக் கோரிக்கை மீது பதில் தாக்கல் செய்துள்ளார். அதில், நிலமற்ற ஏழை பெண் விவசாய தொழிலாளர்கள் 2 ஏக்கர் நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

542 பணியிடங்கள்.. இன்றே கடைசி: APPLY

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10th, ITI. வயது வரம்பு: 18 – 25. சம்பளம்: ₹18,000 – ₹63,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. இது குறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க!

News November 24, 2025

ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள்.. வந்தது அலர்ட்

image

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் வருவதால் தமிழகத்தில் கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

ராஜ்யசபா சீட்: பிரேமலதா கொடுத்த புது விளக்கம்

image

ராஜ்யசபா சீட் விவகாரத்தில் பிரேமலதா புது விளக்கத்தை கொடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலின்போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா MP தருவதாக அதிமுகவினர் உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025-ம் ஆண்டிலா 2026-ம் ஆண்டிலா என்று கூறவில்லை. நாங்கள் 2025 என நினைத்ததால் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இதனால், எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!