News September 27, 2025
1 – 7 பள்ளி மாணவர்களுக்கு.. அரசு புதிய அறிவிப்பு

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் அன்று 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் பருவ புத்தகங்கள் வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட CEO-க்கள், DEO-க்கள் இந்த பணிகளை மேற்பார்வை செய்ய பள்ளி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பல இடங்களில் விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அதனை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 27, 2025
BREAKING: விஜய் பிரச்சாரத்தில் 4 பேர் உயிரிழப்பு?

கரூர், வேலுச்சாமிபுரத்தில் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் கரூர் GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், மேலும் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் GH-க்கு விரைந்துள்ளார்.
News September 27, 2025
விடுமுறையில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்

விடுமுறையில் சுற்றுலா செல்வது உடலுக்கு ஓய்வும், புத்துணர்வும் அளிக்கும். மனதுக்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் தருகிறது. குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிட மிகவும் உதவுகிறது. ஆனால், எங்கே சுற்றுலா செல்வது என்று குழப்பமாக உள்ளதா? உங்களுக்காக மேலே சில இடங்களை போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஸ்வைப் செய்து பாருங்க. நீங்க செல்ல விரும்பும் இடத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 27, 2025
சற்றுமுன்: ரமேஷ் பிரேதன் காலமானார்

பிரபல எழுத்தாளரும் கவிஞருமான ரமேஷ் பிரேதன்(61) காலமானார். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளரான ரமேஷ், ஆரம்பத்தில் எழுத்தாளர் பிரேமுடன் சேர்ந்து செயல்பட்டார். பின் தனியே எழுதி வந்தார். இவர் பின்நவீனத்துவம், நுண்ணரசியல், கவிதைகள், கதைகள் என பல தளங்களில் செயல்பட்டு வந்தார். நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ரமேஷ் இன்று புதுச்சேரியில் காலமானார். ஆழ்ந்த இரங்கல்!