News June 28, 2024
அரசு வேலை: OPS குற்றச்சாட்டு

திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய அரசுத்துறைகளில், 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் என்பதை நிறைவேற்ற தவறியதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில், 3.30 லட்சம் பணியிடங்களை நிரப்பியிருக்க வேண்டிய சூழலில் 65,483 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் மீது அரசுக்கு அக்கறை இருக்குமானால், காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 22, 2026
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டன் கண்டனம்

இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் ராணுவ தளமான டியாகோ கார்சியா மீதான ஈரான் தாக்குதலை பிரிட்டன் கண்டித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதைத் தடுப்பதற்காக, தங்களின் டியாகோ கார்சியா தளத்தை அமெரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரிட்டன் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஈரானில் இருந்து சுமார் 4000 கி.மீ தொலைவில் உள்ள பிரிட்டன் தளத்தை ஈரான் தாக்கியுள்ளது.
News March 22, 2026
தாக்குதல்களை நிறுத்துங்கள்.. ஈரானுக்கு 22 நாடுகள் கடிதம்

ஹார்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்கக் கோரி 22 நாடுகள் ஈரானுக்கு கடிதம் எழுதியுள்ளன. இந்தப் பட்டியலில் UAE, இங்கிலாந்து, பஹ்ரைன், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் பிற நாடுகள் அடங்கும். வளைகுடாப் பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். ஈரானின் நடவடிக்கை உலக மக்களை பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.
News March 22, 2026
அவர்களே முதலில் தாக்குதலை தொடங்கினார்கள்: ஈரான்

PM மோடியுடனான தொலைபேசியில் பேசிய ஈரான் அதிபர் பெஸ்கோவ் நாங்கள் போரை தொடங்கவில்லை என்று கூறியுள்ளார். அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை நடத்தியதாக கூறினார். அணுசக்தி நடவடிக்கைகளை தடுக்கவே இந்த தாக்குதல்கள் என்ற அமெரிக்காவின் கூற்றையும் அவர் நிராகரித்தார். இந்த போர் முடியவேண்டுமென்றால் தங்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றார்.


