News April 28, 2025
அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கு பணப் பலன்: CM

சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பை வாரி இறைத்துள்ளார் CM ஸ்டாலின். அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ₹5 லட்சமாக உயர்த்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கு பணப் பலன் பெறுவது இந்த ஆண்டே அமலாகும் என்றும் 01.10.2025 முதல் 15 நாள்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பயன் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News October 29, 2025
சமஸ்கிருத எதிர்ப்பால் தமிழ் வளராது: துணை ஜனாதிபதி

பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆதினம் சாந்தலிங்க அடிகளார் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், சமஸ்கிருதத்தை எதிர்ப்பதால் மட்டுமே தமிழ் மொழி வளராது எனவும் கூறியுள்ளார். மேலும், குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News October 29, 2025
மக்கள் நாயகன் காலமானார்.. அமைச்சர் இரங்கல்!

தென் மாவட்டங்களில் ‘மக்கள் நாயகன்’ என அழைக்கப்பட்ட <<18127223>>Dr.ராஜசேகர்<<>> மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார். ஏழை மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட சேவைகள் நம் அனைவரது மனதிலும் என்றென்றும் நிலைத்து நிற்கும் எனவும் புகழாரம் சூட்டினார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ₹20 – ₹50 வரை மட்டுமே பீஸ் வாங்கி கொண்டு ஏழைகளுக்கு சிகிச்சை அளித்த Dr.ராஜசேகர் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News October 29, 2025
IND vs AUS: மழை குறுக்கிடுமா?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான T20 போட்டி இன்று தொடங்குகிறது. ODI தொடரை 2- 1 என இழந்த இந்தியா, ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ள நிலையில், மழை அச்சுறுத்தல் உள்ளது. ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் நடைபெறும் போட்டியில், 25% வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.


