News April 28, 2025
அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கு பணப் பலன்: CM

சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பை வாரி இறைத்துள்ளார் CM ஸ்டாலின். அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ₹5 லட்சமாக உயர்த்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கு பணப் பலன் பெறுவது இந்த ஆண்டே அமலாகும் என்றும் 01.10.2025 முதல் 15 நாள்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பயன் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News April 29, 2025
செந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்பு வழங்க திமுக திட்டம்!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது என SC அறிவித்துவிட்டதால், கட்சிப் பணிகளில் அவர் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இந்நிலையில், மேற்கு மண்டல அமைப்புச் செயலாளர் பதவி செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படலாம் என்று திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. திமுகவில் இந்தப் பதவி, தென்மண்டல அமைப்புச் செயலாளராக Ex மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இருந்தபோது கவனம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
News April 29, 2025
எல்லாத்தையும் அடமானம் வச்சிட்டேன்.. நடிகர் நானி

ஹிட் 3 படத்திற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் அடமானம் வைத்துவிட்டதாக நடிகர் நானி தெரிவித்துள்ளார். படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நானி, இந்தப் படத்திற்காக நான் தயாரித்த கோர்ட் படம் உள்பட எல்லாவற்றையும் அடமானம் வைத்துவிட்டேன்; இனியும் வேண்டுமென்றால் ராஜமௌலி-மகேஷ்பாபு படத்தை தான் அடமானம் வைக்க வேண்டும் என்று நகைச்சுவையாக பேசினார். இதைக்கேட்டு இயக்குனர் ராஜமௌலி சிரித்தார்.
News April 29, 2025
அமெரிக்கா யார் பக்கம்? நிபுணர்கள் கணிப்பு

இந்தியா-பாக். இடையே போர் மூண்டால், USA இந்தியாவுக்கு ஆதரவாக நிற்குமென ராஜீய நிபுணர்கள் கணித்துள்ளனர். 1971 இந்தியா-பாக். போரின் போது USA, பாக்.-க்கு ஆதரவளித்தது. இந்நிலையில், இந்தியா குவாட் அமைப்பில் இருப்பதாலும், சீனா-பாக். இடையே நல்லுறவு நீடிப்பதாலும், USA இந்தியாவை பகைக்காது என்கின்றனர். அதேசமயம் தெற்காசியாவில் இந்தியா வலிமையடைவதை USA விரும்பாது என்றும் இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.