News March 26, 2025
அரசு ஊழியர்களுக்கு ஏப்.2இல் சம்பளம்: தமிழக அரசு

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்.2ஆம் தேதி ஊதியம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏப்.1ஆம் தேதி வருடாந்திர கணக்கை முடிப்பதால் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் சம்பளம் 2ஆம் தேதி வழங்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 9.3 லட்சம் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு, முன்னதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News March 29, 2025
நீட் தேர்வு மாணவர் கொல்லி: அன்புமணி

நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட 2வது மாணவி தர்ஷினி என x தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்க நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 29, 2025
வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

ரம்ஜான் தினமான மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் திறந்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி கணக்குகள் முடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அதே தினத்தில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், வங்கிகள் விடுமுறையின்றி செயல்பட்டு கணக்குகளை முடிக்க வேண்டும் என்று RBI உத்தரவிட்டுள்ளது.
News March 29, 2025
நீங்க எவ்வளவு நேரம் போன் பாக்குறீங்க?

இப்போதெல்லாம் காலை கண் விழிப்பதே போனின் அலாரம் சத்தம் கேட்டு தான். கையுடன் போனை ஒட்டிவைத்தது போல ஆகிவிட்டது நிலைமை. ஒரு இந்தியர், சராசரியாக ஒரு நாளில் 5 மணி நேரம் வரை போனை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக இந்தியர்கள் 1.1 லட்ச கோடி மணி நேரத்தை போனை பார்த்து செலவழித்திருப்பதாக கூறப்படுகிறது. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் போன் பாக்குறீங்க?