News April 25, 2024
தபால் மூலம் ஓட்டுநர் உரிமம் கிடைத்ததா?

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகனச் சான்றை தபால் மூலம் வீட்டிற்கே அனுப்பும் பணி பிப்.28இல் தொடங்கப்பட்டது. இந்நிலையில், மார்ச் மாதம் மட்டும் 2.41 லட்சம் ஓட்டுநர் உரிமம், வாகனச்சான்று அனுப்பியதில் 99% உரியவரிடம் சேர்க்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை விளக்கமளித்துள்ளது. அத்துடன், மீதமுள்ள ஒரு சதவீதமும் சரியான விலாசமின்றி திரும்பி வந்துள்ளது. அதனால், உரிய முகவரியை குறிப்பிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 23, 2025
அமித் ஷாவுடன் CP ராதாகிருஷ்ணன் சந்திப்பு

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை NDA துணை ஜனாதிபதி வேட்பாளர் CP ராதாகிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இது பற்றி X தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, CP ராதாகிருஷ்ணன் அனுபவமிக்க தலைவர் எனவும் நிர்வாகத் திறன் கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். சிபிஆர் தேச நலனுக்காக அளப்பரிய தொண்டாற்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
News August 23, 2025
TVK மீது பாயும் விமர்சனங்கள்.. React செய்த விஜய்

தவெகவின் மதுரை மாநாட்டுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அளவு பேரன்பு காட்டும் நபர்களை உறவுகளாக பெற என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை என பதிவிட்ட அவர், தவெக மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம் எனவும் அல்லவையை புறந்தள்ளி புன்னகைப்போம் எனவும் பதிவிட்டுள்ளார்.
News August 23, 2025
குப்பையையும் விட்டுவைக்காத திமுக அரசு: EPS

நாட்டிலேயே கடன் வாங்குவதில் முதலிடம் தமிழ்நாடு என்ற சாதனையை CM ஸ்டாலின் படைத்துள்ளதாக EPS சாடியுள்ளார். திருவெறும்பூர் பரப்புரையில் பேசிய அவர், அதிமுகவின் அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வழங்கப்படுகிறது என்றார். மேலும், திமுக ஆட்சியில் DGP முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து நியமனங்களிலும் ஊழல் நடப்பதாகவும், குப்பைக்கு கூட வரி போட்டு மக்களின் பணம் சுரண்டப்படுகிறது எனவும் விமர்சித்தார்.