News April 25, 2025
காஷ்மீர் குறித்த கூகிள் Search.. கண்டுக்காத பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதலை அடுத்து, கூகிளில் காஷ்மீர் பற்றிய தேடல்கள்தான் கடந்த 3 நாள்களில் அதிகரித்துள்ளது. Google search density அடிப்படையில், இந்தியா 100%, UAE 88%, பூடான் 76% ஆகியவை அதிகமாக தேடியுள்ளன. சம்மந்தப்பட்ட பாகிஸ்தானில் வெறும் 27% தான் காஷ்மீர் குறித்து தேடப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நாடுகளான சீனா (13%), அமெரிக்கா (11%), ரஷ்யா (3%) போன்ற நாடுகளில் காஷ்மீர் குறித்து பெரிய தாக்கம் இல்லை!
Similar News
News December 30, 2025
விழுப்புரம்: 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி!

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார் பகுதியைச் சேர்ந்த ரோசா (35), தனது 3 குழந்தைகளுடன் கணவரின்றி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது கணவர் சொத்துக்களை மாமனார், மாமியார் அபகரித்துவிட்டதாக நேற்று தனது குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.அவரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரை சமாதானம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 30, 2025
நடிகை நந்தினி தற்கொலை.. பரபரப்பு தகவல்

கௌரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் தங்கியிருந்த அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன் அவர் கைப்பட எழுதிய கடிதத்தை போலீஸ் கைப்பற்றியுள்ளது. அதில் திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால், மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் தெரியவரும்.
News December 30, 2025
பல்கலை., மசோதாவை திருப்பி அனுப்பினார் ஜனாதிபதி

சென்னை பல்கலை., துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த மசோதா 2022-ல் நிறைவேற்றப்பட்டது. கவர்னர் ரவி அதனைத் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2023-ல் கவர்னர் அதை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவை 2 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த முர்மு, தற்போது TN அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.


