News April 17, 2024
கள்ளச்சந்தையில் சரக்கு.. கட்டுப்படுத்துமா பறக்கும்படை

மக்களவைத் தேர்தலையொட்டி இன்று முதல் வாக்குப்பதிவான ஏப்.19ஆம் தேதி வரை 3 நாளுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பதால் சிலர் நேற்று மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்க முயற்சி செய்கின்றனர். இதை தேர்தல் பறக்கும்படையினர் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News January 27, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

தொடர் விடுமுறைக்கு பின் இன்று மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர். இந்நிலையில், நாளை 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி திருவாரூரிலும், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
News January 27, 2026
CM ஸ்டாலின் வீட்டில் நிகழ்ந்த பரபரப்பு.. சற்றுமுன் கைது

CM ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்திய EX ராணுவ வீரரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 43 வயதான பாலமுருகன், மதுபோதையில் இந்த செயலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குடித்துவிட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் 6 ஆண்டுகளுக்கு முன்பே அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
News January 27, 2026
ஆதார் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

உங்கள் செல்போனில் இருந்தே தனிப்பட்ட ஆதார் விவரங்களை (முகவரி, பெயர், மொபைல் எண்) புதுப்பிக்கும் வசதி கொண்ட புதிய ஆதார் செயலியை UIDAI நாளை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், இனிமேல் அச்சிடப்பட்ட அசல் அட்டையை எடுத்துச் செல்ல தேவையில்லை. டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்தி, அடையாளச் சரிபார்ப்புகளை விரைவாக முடிக்க இந்த செயலி பெரும் உதவியாக இருக்கும். SHARE IT.


