News December 4, 2024
GOOD NEWS: 1 லட்சம் பேருக்கு விரைவில் வேலை

மத்திய துணை ராணுவப் படைகளில் 1,00,204 பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் தெரிவித்துள்ளார். CRPF-33,730, CISF-31,782, BSF-12,808, IDBP-9,861, SSB-8,646 மற்றும் அசாம் ரைஃபிள்ஸில் 3,377 காலியிடங்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். UPSC, SSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் மூலம் இப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
கல்கி 2-ம் பாகத்தில் தீபிகா படுகோன் இல்லை

பேன் இந்தியா படமான ‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கி போன்ற படங்களில் நடிக்க முழு ஒத்துழைப்பு தேவை எனவும் நன்கு பரிசீலித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், x தளத்தில் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கெனவே பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவர் விலகியிருந்தார்.
News September 18, 2025
நேபாள சூழலை இந்தியாவில் உருவாக்க ராகுல் முயற்சி: பாஜக

ராகுல் காந்தி சுமத்தும் <<17748314>>வாக்கு திருட்டு <<>>குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அனுராக் தாக்குர் கூறியுள்ளார். ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக கேள்வி எழுப்புவதன் மூலம் வங்கதேசம், நேபாளத்தில் ஏற்பட்ட நிலைமையை இந்தியாவிலும் ராகுல் உருவாக்க முயற்சிப்பதாக அவர் சாடியுள்ளார். மேலும், தேர்தல் தோல்வி எதிரொலியாக விரக்தியில் பேசும் ராகுல், இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
நேபாளத்துக்கு இந்தியா உதவும்: PM மோடி

நேபாள இடைக்கால பிரதமர் சுசிலா கார்கியுடன், PM மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, சமீபத்தில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மோடி, நேபாளத்தில் மீண்டும் அமைதி திரும்புவதற்கும், நிலைத்தன்மை உண்டாவதற்கும் தேவையான ஆதரவை இந்தியா வழங்கும் என உறுதியளித்துள்ளார். முன்னதாக, SM-களுக்கு தடை, ஊழலுக்கு எதிர்ப்பு ஆகியவற்றிற்காக Gen Z தலைமுறையினர் போராட்டம் நடத்தினர்.