News December 4, 2024
GOOD NEWS: 1 லட்சம் பேருக்கு விரைவில் வேலை

மத்திய துணை ராணுவப் படைகளில் 1,00,204 பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் தெரிவித்துள்ளார். CRPF-33,730, CISF-31,782, BSF-12,808, IDBP-9,861, SSB-8,646 மற்றும் அசாம் ரைஃபிள்ஸில் 3,377 காலியிடங்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். UPSC, SSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் மூலம் இப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
பிரசவ நாள் நெருங்கும்போது செய்ய வேண்டியவை

➤குழந்தையின் நிலை, இதயத்துடிப்பு, தாயின் ஆரோக்கியம் ஆகியவை சீராக உள்ளனவா என்பதை தொடர்ந்து செக் பண்ணுங்க ➤சத்தான உணவு, பழம், பால் போன்றவற்றைச் சீராக எடுத்துக் கொள்ளவும் ➤மெதுவான நடைபயிற்சி/மருத்துவர் பரிந்துரைத்த யோகா செய்யலாம் ➤ஆடைகள், டயப்பர், மருத்துவ ஆவணங்கள், சார்ஜர், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள் ➤ கர்ப்பிணியை தனியாக விட வேண்டாம். SHARE THIS.
News November 2, 2025
மழை வெளுக்கப் போகுது… வெளியே வராதீங்க

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 10 மணி வரை திருவள்ளூர், வேலூர், தி.மலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகையால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே!
News November 2, 2025
தமிழர்கள் உரிமை பறிபோகும்: வேல்முருகன்

தமிழ்நாட்டில் இருக்கும் பிற மாநிலத்தவர்கள் அவரவர் மாநிலங்களுக்கு சென்று வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு சட்டப்பேரவை மற்றும் MP-க்களை தமிழ் மக்களே தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், SIR அடிப்படையில் இங்குள்ள பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டால், தமிழர்களின் உரிமை பறிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.


