News March 29, 2024
PhonePe பயனர்களுக்கு GOOD NEWS

UPI செயலியான PhonePe பயனாளர்கள் இனி ஐக்கிய அரபு நாடுகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம் என்று அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டுக்கான கரன்ஸியாக இந்திய ரூபாயை மாற்றிய பின்பு பணப் பரிமாற்றம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் UPI இருப்பது போல அரபு நாடுகளில் Neopay சேவை இருக்கிறது. அந்த இரண்டையும் இணைத்திருப்பதன் மூலம் PhonePe இந்த சேவையை வழங்கவுள்ளது.
Similar News
News December 6, 2025
சமூகநீதியை காக்க உறுதியேற்போம்: விஜய்

தவெக அலுவலகத்தில் அம்பேத்கரின், படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையை பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் என சூளுரைத்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர் அம்பேத்கர் என்றும் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
News December 6, 2025
ஜார்கண்டிடம் சரணடைந்த தமிழ்நாடு அணி

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்கண்ட் அணியிடம் தமிழ்நாடு வீழ்ந்தது. முதலில் விளையாடிய ஜார்கண்ட் அணியில் குமார் குஷாக்ரா(84), விராட் சிங்(72) ஆகியோர் TN பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் தமிழ்நாட்டுக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சாய் சுதர்சனை தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால், 20 ஓவர்களில் 179 ரன்களை மட்டுமே எடுத்த TN, தோல்வியடைந்தது.
News December 6, 2025
AGF-PAK இடையே மீண்டும் வெடித்த மோதல்: 4 பேர் பலி

சவுதி அரேபியாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், AGF-PAK இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. எல்லையில் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யார் முதலில் மோதலை தொடங்கியது என்பதில், இருதரப்பும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பொதுமக்களே சிக்கி தவித்து வருகின்றனர்.


